Tag Archives: இந்தியா

நமது காஷ்மீர் வெல்க !

காஷ்மீர் மக்களின் வீரம்செறிந்த போராடமும், பின்வாங்கும் கோழை இந்திய படைகளும்..

உலகின் மிகப்பெரிய ’ஜனநாயக’ நாடு என்று தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும் இந்த நாட்டின் கடந்த கால வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் பார்ப்பனர்களுக்கும் ஆளும் கும்பலுக்கும் சாதகமான முறையில் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றின் ஒரு கிளை. ஆனால், இந்திய ஆளும் வர்க்கம் எழுதிவைத்துள்ளது தான் உண்மையான வரலாறு என்று இந்த ’ஜனநாயக நாட்டில்’ வாழும் ’ஜனநாயகவாதி’கள் அனைவருக்கும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. மனப்பாட கல்வியின் மூலமும், பார்ப்பனிய செய்தி ஊடகங்களின் மூலமும் இந்த ‘வரலாறு’ மீண்டும், மீண்டும் பிரச்சாரம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட உண்மை என்கிற அளவிற்கு பரப்பப்பட்டுள்ளது. அவ்வாறான ’வரலாறு’ தான் இராமர் கோவிலை இடித்த இட்த்தில் தான் பாபர் மசூதியை கட்டினார் என்பது, அவ்வாறான வரலாறு தான் தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது, அவ்வாறான வரலாறு தான் காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்பது. இதே பாணியிலான ஒரு பச்சை பொய் தான் காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம் என்பதும். உண்மையான வரலாற்றை திரிக்கும் இந்த பொய், தேசிய வெறியை ஊட்டுவதன் மூலமும், பார்ப்பனிய செய்தி ஊடகங்களின் மூலமும் மீண்டும் மீண்டும் உண்மை என்று நிலை நிறுத்தப்படுகிறது.

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீர் மக்கள் நடத்தும் வீரஞ்செறிந்த ’சுதந்திரப் போராட்டத்தை’ அவதூறு செய்து,  இழிவுபடுத்தி வரும் இந்திய அரசு இந்திய நாட்டு மக்களிடம் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி என்கிற ‘பொய்’யையும், அந்த மண்ணின் புதல்வர்களை தீவிரவாதிகள் என்றும் கூறி வருகிறது. பார்ப்பனிய செய்தி ஊடகங்களும், பிழைப்புவாத பன்றிகளால் நிரம்பி வழியும் சகல ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் இந்த வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு பீர் பாட்டில் பொங்குவதை போல தேசப்பற்றால் பொங்கி வழிகிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா, டைம்ஸ் நவ், தினமலர் போன்ற பார்ப்பன மலத்தை நுகரும், தேசப்பற்று என்றால் என்ன என்று அதன் சரியான பொருளில் அர்த்தம் புரியாத பிழைப்புவாதிகள், இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் காஷ்மீரிகளுக்கெதிரான கூச்சல்களுக்கு பின்னால் தேசபக்தி பொங்க அணிவகுத்து நிற்கிறார்கள். காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் ? என்று கேட்டால் இந்த தேசபக்த குஞ்சுகள் எந்த ஆதாரத்தையும் முன் வைப்பதில்லை, மாறாக ’வேதம் பொய்யாக இருக்காது’ என்பதைப் போல காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம், அது தான் ’வரலாறு’ என்று கூறுகிறார்கள். ஜனநாயக உணர்வோ, அறிவு நாணயமோ அற்ற முறையில் இந்திய தேசிய வெறியுடன் விஷத்தை கக்குவார்கள். ஆனால், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இவர்கள் எல்லோரும் ஜனநாயகவாதிகள் என்பதை மட்டும் வெட்கமின்றி சொல்லிக்கொள்கிறார்கள், நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் !

காஷ்மீர் என்கிற ’தனிநாடு’ நேரு ’மாமா(!!)’ ஆட்சியின் போது   இந்தியாவால் நயவஞ்சகமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டது. என்றைக்குமே அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை, காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று என்றைக்குமே வரலாறு இல்லை. அது தனி ஒரு ’சுதந்திர நாடு’.  காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கிலுள்ள பல பகுதிகளும் கூட இந்தியாவுக்கு சொந்தமானவை அல்ல !

இவர்களை தான் தீவிரவாதிகள் என்கின்றனர் ஆளும் வர்கமும், ஊடகங்களும்!

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் விரிவாதிக்க வெறிக்கெதிராக காஷ்மீர் மக்கள் வாழ்வா சாவா என்கிற விடுதலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதற்கெதிராக காஷ்மீரி மக்கள் மீது இந்திய அரசு ஏவி வரும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், ஹீரியத் மாநாட்டு கட்சியை சேர்ந்த கீலானி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் (மாவோயிஸ்ட்) சேர்ந்த தோழர்.வரவரராவ் ஆகியோர் பங்கு பெற்ற காஷ்மீர் குறித்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. வழக்கம் போல மோப்பம் பிடிக்கச் சென்ற இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் காஷ்மீர் குறித்து பல வரலாற்று உண்மைகளை கூறிய அருந்ததிராய், கீலானி ஆகிய இருவருக்கும் எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்தது. காஷ்மீர் குறித்து அருந்த்திராய் அப்படி என்ன பேசினார் ? காஷ்மீர் பற்றிய உண்மைகளை சொன்னார் ! காஷ்மீர் காஷ்மீரிகளுடையது அது என்றைக்கும் இந்தியாவுக்கு சொந்தமானதில்லை என்கிற உண்மையை சொன்னார். காஷ்மீரின் உண்மையான வரலாற்றை சொன்னதற்கே தேசத் துரோக வழக்கு என்றால் இது என்ன வகையான ஜனநாயக நாடு ? உண்மையை பேசியதற்காக அருந்த்திராய் மீது வெறி நாய்களைப் போல பாயும் இந்த விரிவாதிக்க வெறியர்கள் அருந்த்திராய் பேசியது தவறு என்றால், எது சரி அல்லது எது உண்மை என்கிற வரலாற்று விவரங்களை முன் வைப்பது தானே நியாயம் ? அருந்த்திராய் பேசுவது பொய் என்றால் இந்த அரசு உண்மையை பேச வேண்டியது தானே ? அவர்கள் கூட்டியதை போல அரசின் சார்பில் ஒரு கூட்ட்த்தை ஏற்பாடு செய்து பத்திரிகையாளர்களை அழைத்து ’வரலாற்று உண்மை’களை அறிவிக்க வேண்டியது தானே ? அதை விடுத்து கைது செய்து சிறையிலடை என்று உத்தரவிடுவது ஏன் ? ஏனெனில், இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு அல்ல, இது ஒரு போலி ஜனநாயக நாடு ! எனவே தான் இங்கு உண்மைகளை கூட துணிந்து சொல்ல முடியவில்லை. கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் ஏட்டளவில் தான். அரசுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை சொல்ல இங்கு உரிமை இல்லை. எனவே தான் ராய் தடுக்கப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் இது ஒரு பிளாக்மெயில். உண்மைகளை பேசும் அறிவுஜீவிகளை அடக்கி ஒடுக்கி வைக்க ஜனநாயகமற்ற அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை தான் இது. ஒரு போலி ஜனநாயக அரசு மட்டுமே இப்படி நடந்துகொள்ள முடியும்.

இந்த நாடு ஒரு போலி ஜனநாயக நாடு என்பதற்கும், இங்கு முழு கருத்து சுதந்திரம் இல்லை என்பதற்கும் மேற்கூறியது மட்டும் சான்றல்ல, இன்னொரு சான்றும் தர முடியும். காஷ்மீரிகளை காசுக்கு கல்லெறியும் கூட்டம் என்று இழிவுபடுத்தும் பார்ப்பன தினமணி இந்த பிரச்சினையை ஒட்டி உடனடியாக ஒரு தலையங்கத்தை எழுதியது. அந்த தலையங்கத்தின் முதல் பத்தியே இது தான். இப்படி ஒரு கருத்தரங்கம் நட்த்துவதற்கு அனுமதி கொடுத்து விட்டு, பிறகு அதில் பேசுவதற்கும் அனுமதியளித்துவிட்டு, பேசியவை அனைத்தும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரசுரமாவதற்கும், ஒளிபரப்புவதற்கும் அனுமதியளித்துவிட்டு கடைசியில் கைது வழக்கு என்று பேசிக்கொண்டிருப்பதெல்லாம் கேலிக்கூத்துஎன்று எழுதியுள்ளது. இதற்கு என்ன பொருள் ? இது தான் ஜனநாயக நாட்டிலுள்ள பத்திரிகையின் லட்சணமா  ? அதன் பிறகு இறுதியாக அந்த தலையங்கத்தை எழுதிய வைத்தியநாத பார்ப்பான், அருந்த்திராய் போன்றவர்களை பேச அனுமதிக்க கூடாது, இது போன்ற பிரிவினைவாத பேச்சுக்களை எல்லாம் கடுமையாக அடக்கி ஒடுக்க வேண்டும் என்கிறார். பார்ப்பன கும்பலுக்கு என்ன ஒரு ஆசை ! இந்த லட்சணத்தில் இவர்கள் ஜனநாயகத்தூண்களில் ஒன்றாம். இந்த வைத்தியையெல்லாம் இராணுவத்தலைவர் ஆக்கினால் நாடு சீக்கிறமே சுபிட்ஷமாயிடும்! ஜனநாயகமற்ற ஒரு நாட்டில் ஒருவன் இப்படித் தான் சிந்திப்பான். ஆனாலும், இது அனைவருக்குமான பொது விதியல்ல.   

அருந்ததி ராய்

பார்ப்பன விஷம் கக்கும் மேற்கண்ட தலையங்கம் வெளியான அடுத்த நாள் அதே பார்ப்பனமணியில் இன்னொரு செய்தி வெளியானது. காஷ்மீரில் குங்குமப்பூ தோட்டத்தில் பூவை பறித்தெடுக்கும் தொழிலாளர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழே  நமது காஷ்மீரில் விளையும் குங்குமப்பூக்கள் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் மிகவும் தெளிவாக“நமது என்பதற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது தினமணி. இது பார்ப்பன கும்பல் வழக்கமாக கையாளும் நரித்தனம் தான். பார்ப்பன பயங்கரவாத கும்பல் பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய பிறகு அந்த இட்த்திற்கு இவர்கள் வழங்கிய பெயர் ‘சர்ச்சைக்குரிய இடம்’. இந்த அயோக்கியத்தனத்தை அப்போதே பல வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு பார்ப்பன செய்தி ஊடகங்கள் அனைத்தும் பாபர் மசூதி இருந்த இட்த்தை சர்ச்சைக்குரிய இடம் என்றே குறிப்பிட்டன. இன்று அந்த சொல்லை வழக்கத்திற்கும் கொண்டு வந்துவிட்டார்கள். இப்படித்தான் ’வரலாறு’ உருவாகி எழுகிறது.

காஷ்மீரி மக்களின் தாய் நிலத்தை கொஞ்சம் கூட வெட்கமோ, குற்றவுணர்வோ இன்றி நமது காஷ்மீர் என்று பேசும் இவர்கள் ’நமது தண்டகாரன்யாவில்லட்சக்கணக்கான மக்கள் ’நமதுஅரசாலேயே அகதிகளாக்கப்பட்டிருப்பதையும், நமதுஅரசாலேயே கொலை செய்யப்படுவதையும் இருட்டடிப்பு செய்வது ஏன் ? நமது குஜராத்தில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த கொலைகாரன் மோடியை காப்பாற்ற முயல்வது ஏன் ?

ஏனென்றால் ஆளும் கும்பலின் ஊதுகுழல்கள் தான் இந்த பத்திரிகைகள் எல்லாம். இதில் நடு நிலைமை வகிக்கும் பத்திரிகைகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. ஆளும் வர்க்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பவை தான் இந்த பத்திரிகைகள். குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும், தாண்டேவாடாவில் லட்சக்கணக்கான பாங்குடிகள் அகதிகளாக்கப்பட்ட போதும், பல நூறு பேர் படுகொலை செய்யப்பட்ட போதும் பீறிட்டெழாத தேசபக்தி காஷ்மீர் பிரச்சினையில் மட்டும் தினமணிக்கு வருகிறது என்றால் அதற்கு விரிவாதிக்க இந்திய தேசிய வெறியே காரணம். அதை தான் இந்த அரசும் தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பார்ப்பன செய்தி ஊடகங்களும் தமது ‘நடுநிலைமை’யையும் மீறி அவ்வப்போதும், தற்போது அடிக்கடியும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்தியா ஒரு போலி ஜனநாயக நாடு என்பதற்கு இந்த அரசும், பத்திரிகைகளும், மற்றுமுள்ள ஜனநாயக தூண்களும் அவர்களுடைய நடைமுறைகளுமே போதுமான சான்றுகளாகும். உதாரணமாக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து சொல்ல வேண்டுமானால், இராமன் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும், பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளே போதுமானவை.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பொருளாதார கொள்கையின் கீழ் இந்த நாட்டையே மீண்டும் ஏகாதிபத்தியங்களுக்கு காலனியாக்கி, மக்களை  அடிமைகளாக்கும் கைக்கூலிகளின் வேலையை தான் இந்த அரசும், ஆட்சியாளர்களும் செய்து வருகிறார்கள். மொத்த நாட்டையும் துண்டு துண்டாக பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறு போட்டு விற்கும் இந்த கைக்கூலிகள் காஷ்மீரை மட்டும் செத்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முக்கிக்கொண்டிருப்பது நல்ல முரண் நகை.

காஷ்மீர் என்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த்து இல்லை. இந்திய விரிவாதிக்க வெறியர்கள் விரும்புவது போல இனி இருக்கப்போவதும் இல்லை. இது தான் வரலாறு, இது தான் உண்மை. இதை துணிவுடன் கூறிய அருந்த்திராயின் குரலை நாமும் எதிரொலிப்போம். இந்திய தேசிய வெறியர்களை அம்பலப்படுத்துவோம். எத்தனை காலம் ஆனாலும், எத்தனை உயிர்கள் மாண்டாலும் அந்த மண்னின் மைந்தர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்திய அடிமைகளிடம் மண்டியிடமாட்டார்கள். ஆக்கிரமிப்பாளர்களை முறியடித்து ’நம் காஷ்மீர்’ வெல்லும். அப்பொழுதும் வரலாறு எழுதப்படும்.


தொடர்புடைய பதிவுகள்

உங்களுடைய‌ கண்ணீர் மக்களுக்காக சிந்தப்படட்டும்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் அட்டகாசம் ! அட்டூழியம் என்றெல்லாம் ஆளும் கும்பலின் ஊதுகுழல்களாக செயல்படும் பத்திரிகைகள் (ஜனநாயக தூன்கள்) அனைத்தும் இன்று ஒப்பாரி வைத்தும் ஊளையிட்டும் வருகின்றன. மக்களுக்காக போராடும் போராளிகளை தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வரும் இந்த அயோக்கியர்கள் இந்த நாட்டை விற்கும்,அந்த துரோகச் செயலுக்கு தடையாக நிற்கும் இந்த மண்ணின் மைந்தர்களை கொல்லும் பயங்கரவாதிகளான ப.சிதம்பரம், மன்மோகன்சிங் கும்பலை பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவதில்லை.

தங்களை நடுநிலை நாளிதழ்கள் என்று கூறிக்கொள்ளும் பத்திரிகைகள்  இந்த கோயபல்ஸ் கும்பல்கள் அனைத்தும் அரசாங்கத்தின், ஆளும் வர்க்கத்தின் குரலையே ஒலித்து வருகின்றன. அதையே உண்மை என்றும் மக்களை நம்ப வைக்கின்றன. இந்த பத்திரிகைகளின் செல்வாக்கால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் இறந்து போன கூலிப்படைகளுக்காக தேசபக்தியுடன் கண்ணீர் விட்டு மாவோயிஸ்டுகளை கண்டன‌ம் செய்கிறார்கள்.

வெளிநாட்டுக்காரனுக்கு நமது நாட்டை விற்கும் துரோகச்செயலுக்கு துணை நின்ற‌ ஐம்பது பேரை மாவோயிஸ்ட் தோழர்கள் கொன்றார்கள். அவர்கள் செத்துப்போனதையே பிரம்மாண்டமாக்கி, அந்த பொணத்தை வைத்துக்கொண்டு பத்திரிகைகளின் மூலம் ஒப்பாரி வைக்கும் இந்த கோயபல்சுகளிடம் கேட்க‌ சில‌ எளிமையான கேள்விகள் இருக்கின்றன.

மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் என்கிறீர்களே அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்டியுள்ள ப.சிதம்பரமும் மன்மோகன்சிங்கும் தேச பக்தர்களா ? இல்லை கைக்கூலிகளா ?

கூலிக்கு மாரடிக்கப்போன 50 சிப்பாய்கள் செத்துப்போனதற்கு ஒப்பாரி வைக்கும் நீங்கள் மகேஷ் முக்த்வி என்கிற இரண்டு வ‌யது குழந்தையின் கைவிரல்கள் வெட்டப்பட்டதை நாட்டு மக்களுக்கு சொன்னீர்களா ?

ஆயிரக்கணக்கான பழங்குடி பெண்கள் கற்பழிக்கப்பட்டது உங்களுக்கு தெரியாதா ? அதை ஏன் உங்களுடைய‌ பத்திரிகைகளில் எழுதி ஓலமிடவில்லை.

நமது நாட்டை அடிமைப்படுத்த வரும் வெளி நாட்டு கம்பெனிகளுக்காக நமது மண்ணின் மைந்தர்களான‌ மூன்று லட்சம் மக்களை அவர்களுடைய வாழ்விடங்களிலிருந்து பிடுங்கி எறிந்து அகதிகளாக்கியதை நீங்கள் இந்த நாட்டு மக்களுக்கு சொன்னீர்களா ? பன்னாட்டு முதலாளிகளுக்காக பழங்குடி மக்களின் 700 கிராமங்கள் கொழுத்தப்பட்டனவே அவை பயங்கரவாதம் இல்லையா ?

இந்த பிரச்சனையில் நீங்கள் உண்மைகளின் வேரை அறிய மறுக்கும் வரை,மக்களுக்காக போராடும் மாவோயிஸ்ட் போராளிகளை பயங்கரவாதிகள் என்றும் ப.சிதம்பரம், மன்மோகன்சிங் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளை,மக்களை கொல்லும் பயஙரவாதிகளை தலைவர்கள் என்றும் சித்தரித்துக்கொண்டிருக்கும் வரை உங்களுடைய கூலிப்படைகள் (இராணுவம்/போலீசு) கொலை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அது தவிர்க்கப்பட முடியாதது. ஏனெனின் மக்கள் மீது நீங்கள் தான் போரை தினித்திருக்கிறீர்கள்.

நண்பர்களே,
இந்த விசயத்தில் உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த கோயபல்ஸ் பத்திரிகைகளின் செய்திகளிலிருந்து மட்டும் கொல்லப்பட்ட கூலிப்படையினருக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். அவர்கள் இந்த நாட்டை அடிமைப்படுத்தும் கைக்கூலிகளின் கொள்கையை நடைமுறைப்படுத்த,அதற்கு தடையாக நிற்கும் நமது மக்களை கொல்ல துப்பாக்கிகளுடன் காடுகளில் திரிந்தவர்கள். அந்த துரோகம் ஒழித்துக்கட்டப்பட்டது. அவர்களுக்காக நாம் கண்ணீர் சிந்துவது கேவலமானது. உங்களுடைய‌ கண்ணீர் மக்களுக்காக சிந்தப்படட்டும்.


சிதம்பரத்தின் காட்டுவேட்டைக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி

“”போர்ப் பிரகடனம் செய்!” என வெறிக் கூச்சல் போடுகிறது இந்தியக் கூட்டுப் பங்குத் தொழில் கழகங்களின் (கார்ப்பரேட் நிறுவனங்களின்) ஊதுகுழலான “”இந்தியா டுடே” ஏடு. “”மென்மையான அணுகுமுறைகள் தோற்றுப் போய்விட்டன என்று தண்டேவாடா படுகொலைகள் காட்டிவிட்டன. தோட்டாவுக்குத் தோட்டா நக்சல்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.” ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)களை ஒழித்துக் கட்டுவதோடு மத்திய கிழக்கு இந்தியாவில் வாழும் ஆதிவாசிபழங்குடி மக்களுக்கு எதிரான போரை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கி ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டன. இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கழகங்களின் கூட்டமைப்பு (FICCI) கடந்த ஆண்டு மத்தியில் விடுத்த கோரிக்கையை ஏற்று மாவோயிஸ்டுகளுக்கு எதிரான காட்டுவேட்டையைத் (ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட்) தொடங்கி நவீன ஆயுதங்களுடன் 60000 ஆயுதப் படையினரை ஏவிவிட்டதன் மூலம் ஒரு உள்நாட்டுப் போரை அது நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை.

பிறகு ஏன் உடனடியாகப் போர்ப் பிரகடனம் செய்யும்படி கூச்சல் போடவேண்டும்? கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி அதிகாலை ஜந்தரை மணி. சட்டிஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் சிந்தல்நாடு கிராமத்துக்குச் சற்றுத் தொலைவில் முக்ரானா காடுகளில் தற்காலிக முகாமிட்டிருந்த மத்திய ரிசர்வ் படையின் ஆல்ஃபா கம்பெனி என்ற 62வது பிரிவின் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மக்கள் விடுதலைக் கொரில்லா இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 76 ரிசர்வ் படையினர் கொல்லப்பட்டனர். உயிர் தப்பிக்க மரங்களின் பின்னே ஓடி ஒளிந்தவர்கள் அதனடியே புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர். எஞ்சியவர்களை மீட்பதற்காக கோப்ரா (ராஜநாகப்) படைப்பிரிவு சென்ற குண்டு துளைக்க முடியாத கனரக ஆயுதந்தாங்கிய மோட்டார் வாகனமும் நிலக்கண்ணி வெடியில் சிக்கிச் சின்னாபின்னமாக வெடித்துச் சிதறியது.

ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுப் படையினர் தொடுத்த காட்டுவேட்டை என்ற உள்நாட்டுப் போர் நடவடிக்கையில் இதுவரை அதிகபட்சமாக இந்தத் தாக்குதலில் மட்டும் 76 பேர் கொன்றொழிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் மாவோயிஸ்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சிந்தல்நாடு தாக்குதல் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் மட்டுமல்ல பத்திரிக்கைகள் மற்றும் வானொளி உட்பட செய்தி ஊடகங்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மறுநாளே செய்தி ஊடகங்கள் கதறின. “”காட்டுமிராண்டித்தனம் “படுகொலை’ “இரத்த ஆறு’ “நக்சல் கசாப்புக் கடை வெறி ‘ “”நக்சல் அட்டூழியம்” என்று தலைப்புச் செய்திகள் நஞ்சைக் கக்கின. நக்சல்பாரிகளை விலங்கு மனிதர்கள் கோழைகள் என்று முத்திரைகுத்தி வெறுப்பை உமிழ்ந்தன. நக்சல் அனுதாபிகள் மட்டுமல்ல மனித உரிமைப் போராளிகள் கூடத் தீவிரவாதத்தின் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்.

திடீரென்று நாடே முற்றுகையிடப்பட்டு முழுமையான கிரமமான போரில் தள்ளப்பட்டதைப் போல ஆளும் வர்க்கக் கட்சிகள் கதறின. “”அரசுஎந்திரம் இராணுவம் விமானப்படை உட்படத் தன்னிடம் உள்ள அனைத்துச் சக்திகளையும் திரட்டி நக்சலைட்டுகளை ஒழித்துக் கட்டிவிட வேண்டும்” என்று அலறினார்கள். “”இராணுவத்தை நேரடியாக ஈடுபடுத்த முடியாவிட்டால் துணை இராணுவத்துக்கும் போலீசுக்கும் நவீன ஆயுதங்களைக் கொடுத்து மறு பயிற்சியும் மறு சீரமைப்பும் செய்து கிரமமான ஆயுதந்தாங்கிய படைகளுக்குச் சமமாக அவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும்; ஆயுதந்தாங்கிய கலகக்காரர்கள் எப்போதும் தாக்குதல் நிலையில் இருக்கும் போது இராணுவ அதிகாரிகளைக் கொண்டு இராணுவத்தைப் போலவே துணை இராணுவப் படைகளைத் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகி விட்டது கலகக்காரர்களை ஒடுக்குவதற்கு என்றே தனிப்பயிற்சி பெற்ற துணை இராணுவப் படைகளை உருவாக்க வேண்டும்” என்று ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் ஆட்சியாளர்களுக்கு உபதேசங்கள் செய்கின்றனர்.

சிந்தல்நாடு தாக்குதலுக்கும் இவ்வளவு பெரிய இழப்புக்கும் காரணம் தக்க பயிற்சி பெறாத படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டதும் போதிய உளவுத்துறை தகவல் இல்லாமல் போனதும்தான் காμணம் என்று கூறும் எதிர்ப்புரட்சி நிபுணர்கள் ஆந்திராவில் செய்ததைப் போலத் தனியார் அரசு கிரிமினல் கொலைப்படைக் குழுக்களை உருவாக்கி நக்சல்பாரிகளின் தலைமையைக் குறிவைத்துக் கொன்று விடவேண்டும். அதற்காக இரகசியமான சட்டத்துக்குப் புறம்பான உளவு மற்றும் கொலைக் குழுக்களின் வலைப்பின்னலை உருவாக்க வேண்டும்” என்று சகுனித்தனமான ஆலோசனைகளைக் கூறுகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஈவு இரக்கமற்ற கொடூரமான இராணுவமயமான காட்டுமிராண்டித்தனத்துக்குள் தள்ளுவதற்கே இது இட்டுச் செல்லும். சந்தேகத்துக்கிடமான எவரையும் சுட்டுத் தள்ளுவதைத்தான் குஜராத்திலும் பஞ்சாபிலும் காஷ்மீரிலும் வடகிழக்கு இந்தியாவிலும் இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதையே மத்திய இந்தியா முழுவதும் விரிவாக்கும்படி ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் பரிந்துரைக்கிறார்கள்.

சிந்தல்நாடு தாக்குதல் மற்றும் இழப்புகளுக்காக இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கும் அறிவுஜீவிகளும் செய்தி ஊடகங்களும் சில உண்மைகளை வசதியாக மறந்து விடுகிறார்கள். சட்டிஸ்கர் ஆந்திரா மராட்டியத்தில் எண்ணற்ற சிவிலியன் மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவத்தாலும் கொலைக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் போலி கம்யூனிஸ்டு  இன்னாள் காங்கிரசு எம்.எல்.ஏ. தலைமையில் அரசே உருவாக்கியுள்ள சல்வாஜூடும் என்ற குண்டர்படையின் சிறப்பு போலீசு அதிகாரிகள் தலைவெட்டிக் கொலைகள் பாலியல் வன்முறைகள் சித்திரவதைகள் பழங்குடி மக்களின் குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்துவது  சூறையாடுவது என்று கொலைவெறியாட்டங்கள் புரிந்துள்ளனர். ஈழத்தில் முள் கம்பி வேலிக்குள் அரசு சித்திரவதை முகாமுக்குள் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் போல இங்கே மூன்று இலட்சம் பழங்குடி மக்கள் தமது குடியிருப்புகளில் இருந்து விரட்டப்பட்டு அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிந்தல்நாடு தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் கொரில்லா இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களைவிடப் பன்மடங்கு அதிகமானவர்களை இந்தியத் துணை இராணுவமும் போலீசும்தேடுதல் வேட்டை என்ற பெயரில் கொன்று போட்டிருக்கிறது. சிந்தல்நாடு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நிராயுதபாணிகளான சிவிலியன் மக்கள் அல்ல. ஆயுதந்தரித்த துணை இராணுவத்தினர்தாம். ஆனால் 2009ஆம் ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளின் செல்வாக்குள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் 589 சிவிலியன் மக்களை அμசப் படைகள் கொன்று போட்டிருக்கின்றன் சிறுவர்களின் விரல்களை வெட்டிப் போட்டுள்ளனர்; பெண்ணின் மார்பகத்தை அறுத்து வீசியுள்ளனர்; இதைவிடக் கொடூரம்  காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்க முடியும்! சட்டிஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் மட்டும் வீடுகளைச் சூறையாடியும் இடித்துத் தள்ளியும் தீயிட்டுக் கொளுத்தியும் 700பழங்குடி கிராமங்களைச் சுடுகாடுகளாக்கி விட்டனர்.

இவ்வளவு அட்டூழியங்களையும் செய்தி ஊடகங்களின் உடந்தையோடு மூடி மறைத்து விட்டு “”இது ஒரு போர்; ஆயுதந்தரிக்கவோ கொல்லவோ சட்டபூர்வ உரிமையில்லாதவர்களால் அரசின் மீது திணிக்கப்பட்ட போர். தேவையானால் இராணுவம் விமானப் படையைக் கூட பயன்படுத்தி இதை எதிர்கொள்வோம்” என்றுகார்ப்பரேட் கம்பெனிகளின் முன்னாள் ஆலோசகரும் தற்போதைய மத்திய போலீசு மந்திரியுமான சிதம்பரம் எச்சரிக்கிறார் மிரட்டுகிறார்.

சிதம்பரத்தின் முறைப்படியான இந்தப் போர்ப்பிரகடனத்தைப் பகுத்துப் பார்த்தால் தற்போது இந்திய அரசு யாருக்காக எதற்காக இந்த உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது என்ற உண்மைகள் விளங்கும். நிச்சயமாக மாவோயிஸ்ட்கள் இந்த உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கவில்லை. பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமது வாழ்விடங்களாகக் கொண்டுள்ள மத்திய இந்தியாவின் கனிம வளங்கள் காட்டுவளங்கள் நிலம் நீர் மற்றும் இயற்கை மூலாதாரங்களை பன்னாட்டு இந்நாட்டுத் தரகு அதிகார வர்க்கக் கூட்டுப் பங்குத் தொழில் நிறுவனங்களுக்கு அற்ப சொற்ப விலைக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. மன்மோகன் மாண்டேக்சிங் சோனியா  சிதம்பரம் கும்பல். இந்த இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு வசதியாக பழங்குடி மக்களை அந்தப் பிராந்தியத்திலிருந்து விரட்டியடித்து வருகிறது.

இயற்கை வளங்களை அதன் உரிமையாளர்களான பழங்குடி மக்களிடமிருந்து மனிதாபிமானமற்ற முறையில் பிடுங்கி பன்னாட்டு  இந்நாட்டு தொழில் முதலைகளுக்குப் பங்கு வைப்பது என்பது அரசின் பொருளாதாரக் கொள்கையாகிவிட்ட நிலையில் அதற்குத் தடையாக நிற்கும் பழங்குடி மக்களையும் அவர்களுக்குப் பாதுகாவலனாக நிற்கும் மாவோயிஸ்டுகளையும் துணை இராணுவம் மற்றும் இராணுவம் ஆகிய அரசுப் படைகளை ஏவிவிட்டு வரலாறு காணாத காட்டுமிராண்டி பயங்கரவாத்தை ஏவிவிட்டு பிரகடனப்படுத்தாத உள்நாட்டுப் போரை இந்திய அரசுதான் தொடுத்தது. இதை ஒரு போர் என்று அரசு முறைப்படி பிரகடனப்படுத்தியதா அல்லது மாவோயிசத் தீவிரவாதத்தை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்குவோம் என்று திரும்பத்திரும்ப பலமுறை சொல்கிறதா என்பது முக்கியமில்லை. நடைமுறையில் இந்திய அரசு உள்நாட்டுப் போரைத்தான் நடத்தி வருகிறது.

பழங்குடி மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எதிராக இந்திய அரசு நடத்திவரும் இந்த உள்நாட்டுப்போரின் உண்மையான நோக்கத்தை வெளிப்படையாகக் கூறி நியாயப்படுத்த முடியாத ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரே தர்க்கவாதம் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதந்தரிக்கவும் யாரையும் கொல்லவும் சட்டபூர்வமான உரிமை எதுவும் கிடையாது அரசுப் படைகள் அவ்வாறு செய்வதற்கான எல்லா நியாய உரிமைகளும் உள்ளன ஏனென்றால் அவை ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் வழிநடத்தப்படுகின்றன என்பதுதான்.

“ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் வழிநடத்தப்படுகிறது” என்பதற்காக இந்தியஅரசுப் படைகள் மேற்கொள்ளும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை படுகொலைகள் போலி மோதல்கள் சூறையாடுதல்கள் ஆகிய காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்திற்கும் சட்டப்படியான நியாயப்படியான உரிமை உண்டா? ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் இந்நாட்டின் இயற்கை வளங்களை பன்னாட்டு இந்நாட்டுத் தμகு அதிகாμ வர்க்கங்கள் சூறையாடுவதற்கும் தாரை வார்ப்பதற்கும் கூடச் சட்டப்படியான நியாயப்படியான உரிமை அதற்கு உண்டா? இந்த நோக்கங்களுக்குத் தடையாக நிற்கும் தம் சொந்தமக்களையே கொன்றொழிக்கும் உள்நாட்டுப் போரை நடத்தவும் உரிமை உண்டா

தொடர்புடைய இடுகைகள்

Arundhati Roy: Walking with the Comrades

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

அரசின் நிர்பந்தமே மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு காரணம்- அருந்ததி ராய்

OPERATION GREEN HUNT !!

இது தான் ப.சிதம்பரத்தாலும் மன்மோகன்சிங்காலும் விற்பனை செய்யப்பட்ட நியமகிரி மலை !!

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் – புதுவையில் மே தின பேரணி பொதுக்கூட்டம்!!

அன்பார்ந்த‌ உழைக்கும் மக்களே

மே நாள்! தொழிலாளி வர்க்கம் தமது உரிமைகளைப் போராடி வென்ற நாள். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அன்றைய தொழிலாளி வர்க்கம் நாளொன்றுக்கு 20 மணிநேரம் உழைக்க வேண்டும். முதலாளியிடம் கோரிக்கை வைக்கவோ, சங்கம் வைக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. உழைப்பை விற்று உயிர் வாழலாம் அவ்வளவுதான்.

இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக 124 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ வீதியில் வெகுண்டெழுந்தார்கள் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள். அவர்களது போராட்டத்தை அடக்க துப்பாக்கி ஏந்திய படையை ஏவினார்கள் முதலாளிகள். இரத்தத்தையும் உயிரையும் சிந்தினார்கள் தொழிலாளர்கள். சிவந்தது சிகாகோ வீதி. அந்த சிவந்த மண்ணிலிருந்து மே நாளில் முளைத்ததுதான் 8 மணிநேர வேலை, 8 மணி நேர குடும்ப சமூகப்பணி, 8 மணி நேர உறக்கம் என்கிற உரிமை. அமெரிக்க வீதியை மட்டுமல்ல, அகில உலகத்தையும் பற்றிக் கொண்டது அந்தப் போராட்டத் தீ. அதன்பின் சிகாகோவின் வெற்றி உலக தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்த உரிமையாக நிலைநாட்டப்பட்டது.

ஆனால் இன்றோ, பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறது தொழிலாளி வர்க்கம். கையில் செல்போன், கடன் வாங்கிக் கட்டிய வீடு, எந்நேரமும் பிடுங்கப்படலாம் என்கிற நிலையில் உள்ள இரு சக்கர வாகனம் இவற்றையெல்லாம் காட்டி தொழிலாளி வர்க்கம் முன்னேற்றம் அடைந்து விட்டதாக ஆளும் வர்க்கமும், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களும் பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றன. ‘முன்னேற்றம்’ என்கிற மயக்கத்தில் உரிமை என்கிற உணர்வு மறக்கடிக்கப்படுகிறது.

உலகமயமாக்கத்தின் இன்றைய விளைவாக 20 மணிநேரம் வரைக்கூட உழைக்க வேண்டியுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கக் கூடத் தடை விதிக்கிறது, முதலாளித்துவ அடக்குமுறை. கால் மணிநேரத்திற்கு மேல் சாப்பிடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற பின்தங்கிய மாநிலத் தொழிலாளர்கள் ஓய்வு, உறக்கம் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் தானியங்கி எந்திரமாகவே மாற்றப்பட்டு விட்டார்கள்.

கொள்ளுப் பையைக் காட்டி, குதிரையை ஓட வைப்பதைப் போல தாலியைக் காட்டி இளம் பெண்களின் உழைப்பையும் எதிர்காலத்தையும் உறிஞ்சும் ‘சுமங்கலித் திட்டம்’ இலட்சக்கணக்கான ஏழை இளம் பெண்களைக் கொத்தடிமைகளாய் பிணைத்து போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி, வேலைக்கும் சம்பளத்திற்கும், வாழ்க்கைக்கும் முதலாளிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கூலி அடிமைகளாய் இன்று கோடிக்கணக்கில் தொழிலாளர்கள். உலகையே தனது வியர்வையால் கட்டியெழுப்பிய தொழிலாளி வர்க்கம், இன்று பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறது. விலையுயர்வுக்கேற்ப சம்பள உயர்வு, மருத்துவப்படி, போனஸ், ஓய்வூதியம், வாரிசுக்கு வேலை போன்று போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க சங்கம் அமைக்கக் கூட உரிமையில்லை. மொத்தத்தில் பெற்ற உரிமைகள் அனைத்தையும் சுனாமிபோல் சுருட்டி 124 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு இழுத்து தள்ளிவிட்டது முதலாளித்துவ பயங்கரவாதம்.

தொழிலாளர்களோ, புதிதாக எதையும் உரிமையாக கேட்கவில்லை. ஏற்கெனவே போராடிப் பெற்ற உரிமைகளான சங்கம் கூடும் உரிமை, கோரிக்கைகளுக்காக போராடும் உரிமை இவற்றுக்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் சங்கம் வைக்க தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை. குறிப்பாக சென்னையில் உள்ள தென்கொரிய நாட்டு ஹுண்டாய் கம்பெனியில் சி.ஐ.டி.யு. சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் பு.ஜ.தொ.மு. செயல்படும் புதுச்சேரி லியோஃபாஸ்ட்னர்ஸ், மெடிமிக்ஸ், பவர் சோப், சென்னை நெல்காஸ்ட், கோவை எஸ்.ஆர்.ஐ., உடுமலை சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் போன்ற கம்பெனிகளிலும் சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேற்கூறிய கம்பெனிகளில் சங்கம் வைத்ததற்காகவே தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆலைமூடல், அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல், போலீசை ஏவி பொய் வழக்கு சிறை வைப்பு என அடுக்கடுக்காக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகள் மட்டுமல்ல, விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என அனைத்து பிரிவினரின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றது. விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்திவரும் விதைகளையும், விவசாயம் சார்ந்த அனுபவ அறிவையும் பயன்படுத்த தடை விதிக்கும் “தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம்” என்னும் கொடிய சட்டமும், அமெரிக்காவின் மான்சாண்டோ கம்பெனியின் மரபணு மாற்று விதைகள் போன்றவற்றை எதிர்ப்போரை ஓர் ஆண்டு சிறையில் தள்ளவும், ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்யும் “உயிரி தொழில் நுட்பவியல் ஒழுங்காற்று ஆணைய சட்டம்” என்னும் கருப்பு சட்டமும் மத்திய, மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்டு விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

பன்னிரண்டு கடல் மைல்கள் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என சட்டமியற்றி மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு வழக்குரைஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாடலாம் என சட்டமியற்றி வழக்குரைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு பல்கலைகழக மசோதா நிறைவேற்றப்பட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறது.

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல கோடி மதிப்புள்ள கனிவளங்களுக்கு பாதுகாப்பாய் இருந்து வருகிறார்கள் பழங்குடி மக்கள். போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு கம்பெனிகள் அந்த தாதுப்பொருட்களையும் கனிவளங்களையும் கொள்ளையடிக்க அப்பழங்குடிகள் மீது “காட்டு வேட்டை” எனும் பெயரில் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒரு லட்சம் துணை இராணுவ வீரர்களை ஏவி அம்மக்களின் வாழ்வுரிமையும், உயிரும் பறிக்கப்படுகிறது.

தங்களின் வாழ்வுரிமை, பறிப்புக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் தனித்தனியாக போராடுகின்றனர். போராடும் அம்மக்கள்மீது போலீசு மற்றும் இராணுவத்தை ஏவி கொடூரமான யுத்தம் நடத்தப்படுகிறது. அதாவது பன்னாட்டு முதலாளிகள் நம் விவசாயத்தையும், விளைநிலங்களையும் அபகரித்துக் கொள்ளவும், நமது கடல் வளங்களை அள்ளிச் செல்லவும், காடு மற்றும் கனிவளங்களை கொள்ளையடிக்கவும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது, மத்திய மாநில அரசுகள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினால் அந்த மக்களின் மீது போர் தொடுக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்றவைகளின் உத்தரவுப்படியே மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படுகிறது.

மக்களின் வாழ்வுரிமை பறிப்பும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீதான தாக்குதல்களும் ‘தேசத்தின் வளர்ச்சி’ என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக எந்த ஓட்டு கட்சிகளும், ஊடகங்களும் மூச்சு விடுவது இல்லை. காரணம் கொள்ளையடிக்கும் பணத்தில் ஓட்டுக் கட்சிகளுக்கும், ஊடக முதலாளிகளுக்கும் வாய்கட்டுப் போடுகின்றன பன்னாட்டு கம்பெனிகள்.

தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறிப்பது, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் அவர்களுக்கு தரகு வேலை பார்க்கும் உள்நாட்டு முதலாளிகளின் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை மாற்றுவது, மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பது, எதிர்த்து போராடும் மக்களை வாழ்விடங்களிலிருந்தே விரட்டியடிப்பது, நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது, இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம். வாழ்வுரிமையை இழந்து போராடும் மக்கள், நாடு மறுகாலனியாகிறது நமது பிரச்சினைகளுக்கு அதுதான் காரணம் எனப் புரிந்துக் கொள்ளவில்லை. அவ்வாறு மக்களுக்கு புரிய வைப்பதும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டுவதும் தொழிலாளி வர்க்கத்தின் கடமை. ஏனெனில் தனது நலனுக்காக மட்டுமின்றி, பிற வர்க்கங்களின் நலனுக்காகவும் போராடும் மரபை கொண்டது தொழிலாளி வர்க்கம்.

அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்து நாட்டையே அடிமையாக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக போலீசு, இராணுவம், நீதிமன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம், ஓட்டுக் கட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நிற்கின்றன. ஆனால் உரிமைகளை இழந்து நிற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கோ, தங்களை போல் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு போராடும் பிற மக்களை தங்களுடன் இணைத்துக் கொள்வதும், சிதறி கிடக்கும் தொழிலாளர்களை அமைப்பாக அணிதிரட்டுவதையும் தவிர வேறுவழியில்லை. ஒற்றுமை உணர்வும் ஓங்கிய கைகளும் தோற்றதாக வரலாறு இல்லை. தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!

நிகழ்ச்சி நிரல்:

மே 1 – 2010

பேரணி

துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம்,புதுச்சேரி.


பேரணியை துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா,
அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


பொதுக்கூட்டம்

மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை,
ரோடியர் மில்,
புதுச்சேரி

தலைமை:
தோழர் அ. முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்:

கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்

உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:

தோழர் சுப. தங்கராசு,
பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

சிறப்புரை:
முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

தோழர் காளியப்பன்,
இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

புரட்சிகரக் கலை நிகழ்ச்சி

மையக்கலைக்குழு,
ம.க.இ.க.,
தமிழ்நாடு


மே நாள் சூளுரை!

தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுப்போம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
போலி ஜனநாயக மயக்கத்தை விட்டொழிப்போம்!
நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு திரண்டெழுவோம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி


தொடர்புடைய இடுகைகள்

சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை,  ஒரு தொழிற்சங்கம் உருவான கதை!
வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !
ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

ஐடி துறை நண்பா இதை கொஞ்சம் கவனி !

“சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”