ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை!தமிழகம் தழுவிய மக்கள் இயக்கம்!

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை

கார்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!

தனியார்ம்யமே இதன் ஆணிவேர்

தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்!

ஸ்பெக்ட்ரம் கொள்ளையர்கள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றழைக்கப்படும் பகர்கொள்ளை, தி.மு.க.வின் முதற்கொள்ளை அல்ல. திருக்குவளை அரச குடும்பத்தின் புலிகேசிகள் பகலில் அமைச்சர்களாகவும் இரவில் கொள்ளையர்களாகவும் இருந்து நடத்தி வரும் கொள்ளையின் உச்சகட்டம் தான், இந்த 1,76,000 கோடி ஊழல்.

இது வரலாறு காணாத பெரும் ஊழலாக இருப்பதும் ஒருவகையில் இந்தக் கொள்ளைக் கூட்டத்திற்கு சாதகமாகி விட்டது. தொலைக்காட்சி, சினிமா, பத்திரிக்கைகள், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனி, சிமெண்டு கம்பெனி, மணல் கொள்ளை, கட்டைப் பஞ்சாயத்து என்ற பல்வேறு தொழில்களில் 100 கோடி, 200கோடி என்று பொதுச்சொத்தை கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பத்தின் மாநில திருட்டுகளை மறைத்து விட்டது இந்த தேசியத் திருட்டு.

ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் உண்மையான சூத்திரதாரிகளான டாடா, அம்பானி, ஏர்டெல் அதிபர் மித்தல் போன்ற கார்பரேட் முதலாளிகளும், ‘ராசா-ராடியா-கனிமொழி’ கூட்டணிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு விட்டார்கள். கொள்ளையை பங்கு போட்டுக்கொள்வதில் இந்தக் கார்பரேட் குடும்பங்களுக்கிடையில் தோன்றிய மோதலும், கருணாநிதி குடும்பத்துக்குள் ஏற்கனவே நடந்து வரும் குத்து வெட்டும் சந்திக்கின்ற சங்கமத்தில், தவிர்க்க முடியாமல் வெளிக்கிளம்பி வந்து விட்டது , ஸ்பெக்ட்ரம் ஊழல்.

‘ராசா-ராடியா-கனிமொழி’ கூட்டணி

சி.பி.ஐ. விசாரணை, உச்சநீதி மன்றத்தின் கண்கானிப்பு, ஊழல் தடுப்பு சட்டம் என்ற நாடங்கங்கள் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை வாயைப் பிளந்து கொண்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, திரை மறைவில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கிடையிலான மோதலில் மூன்று அப்பாவி தினகரன் ஊழியர்களைக் காவு வாங்கிய அழகிரியும் மாறன் சகோதரர்களும் இன்று கட்டித் தழுவிக்கொள்கிறார்கள்.

கடந்த சில மாதங்களில் மட்டும் ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், வீட்டுக்கடன் ஊழல், வங்கி ஊழல், எல்.ஐ.சி ஊழல், அரிசி கடத்தல் ஊழல் என்று அடுக்கடுக்காக ஊழல்கள் அம்பலப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஊழலின் தொகையும் 1000கோடி, 10,000கோடி என்று உயர்ந்து கொண்டே போகிறது.

உயர்ந்து கொண்டே போகும் ஊழல் தொகையைப் பத்திரிக்கையில் பார்க்கும் போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு சாபம் கொடுத்துவிட்டு ‘உயர்ந்து கொண்டே போகும் விலைவாசியை சமாளிப்பது எப்படி’ என்ற கவலையில் மூழ்குகிறார்கள் மக்கள். அதற்கும் இதற்கும் உள்ள உறவு மக்களுக்கு புரிவதில்லை. இந்த ஊழல் தொகையெல்லாம் யாரோ யாரிடமிருந்தோ அடித்த கொள்ளை என்று நினைத்துக் கொண்டிருப்பதால் மக்களுக்கு கோபமும் வருவதில்லை. “நீ திருடன்… நீ திருடன்” என்று திருடர்கள் தமக்குள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த பங்கு பிரிக்கும் தகராறை, டீவி சீரியல் போலப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் பறிகொடுத்த மக்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக்கொள்வோம். 400 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றையை அரசிடமிருந்து வாங்கி, அதை 1200கோடிக்கு டோகோமோ என்ற ஜப்பான் கம்பெனிக்கு விற்றிருக்கிறார் டாடா. 12000க்கு மேல் இன்னொரு 12000 கோடி லாபம் வைத்து மொபைல் கட்டணமாக நம்மிடமிருந்து வசூலிக்கிறது டோகோமோ கம்பெனி. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அன்றாடம் பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 1,76,000கோடியை அடைக்கப்போவது நாம் தான். டாடா, அம்பானி, மித்தலின் சொத்து மதிப்பை உயர்த்தப் போகிறவர்களும் நாம் தான்.  அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததற்காகத்தான் அமைச்சர் ராசா வுக்கு இலஞ்சம்.

ஸ்பெக்ட்ரம் டாடா

அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கும் இலஞ்சத்தை, முதலாளிகள் நம்மிடமிருந்து தான் உறிஞ்சி எடுக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்களில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலாளிகள் கொடுக்கும் இலஞ்சம் என்பது நம்மையும், நம்முடைய நாட்டின் பொதுச் சொத்துக்களையும் கொள்ளையடிப்பதற்கான இலஞ்சம். மக்களோ சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பெறுவதற்கே இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ரேசன் கார்டுக்கும் சாதிச் சான்றிதழுக்கும் மக்கள் கொடுக்கும் ரூ.100, 200 இலஞ்சம் என்பது வயிற்றுப்பாட்டை சமாளிப்பதற்கு மக்கள் வயிறெரிந்து கொடுக்கும் இலஞ்சம்.

இலஞ்சமும் ஊழலிம் முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு மட்டும் தான் அது பாதகமாக இருக்கிறது. இரண்டு ரூபாய் இலஞ்சம் கொடுத்தால் பத்து ரூபாய் எடுத்து விடுவார்கள் முதலாளிகள். பன்னிரெண்டு ரூபாயையும் மறைமுக வரியாகவும், விலைவாசி உயர்வாகவும் தங்கள் தலையில் சுமப்பவர்கள் மக்கள் தான்.

“12,000 கோடிக்கு விற்றிருக்க கூடிய அலைக்கற்றையை 400 கோடிக்கு டாடாவுக்கு கொடுத்தது சட்டப்பூர்வமானது தான்” என்று அடித்து பேசுகிறார் ராசா. அவருடைய தலைவர் கருணாநிதியோ, சென்னையில் 650 கோடி ரூபாய் முதல் போட்டிருக்கும் நோக்கியா கம்பெனிக்கு 650 கோடி மானியம் தருகிறார். உலகச்சந்தையில் டன் 7000 ரூபாய்க்கு விற்கும் இரும்புத் தாதுவை வெறும் 27 ரூபாய்க்கு முதலாளிகளிடம் விற்கிறது இந்திய அரசு. 500 கிராமங்களில் இருந்து பழங்குடி மக்களை அடித்து விரட்டி விட்டு அந்த கிராமங்களை டாடாவின் சுரங்க கம்பெனிக்கு சொந்தமாக்குகிறது சட்டீஸ்கர் மாநில அரசு. ஆறுகள், குளங்கள், மலைகள், காடுகள், விளைநிலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே இப்படி விலைபேசப்படுகின்றன. இதெல்லாம் பகற்கொள்ளை, மோசடி என்று நமக்கு பச்சையாகத் தெரிகிறது.

ஆனால் இவ்வாறு நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் முதலாளிகளிடம் ஒப்படைப்பது தான் பொருளாதாரத்தை முன்னேற்றும் என்றும், வேலைவாய்ப்பைப் பெருக்கும் என்றும், இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்துமென்றும் எல்லா கட்சி ஆட்சியாளர்களும் சொல்கிறார்கள். அதைத்தான் ராசாவும் சொல்கிறார். இந்தக் கொள்ளையெல்லாம் சட்டவிரோதமாக அல்ல, சட்டபூர்வமாகவே அமல்படுத்தப்படுகிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பது இது தான். இது தேச முன்னேற்றம் என்ற பெயரில் நடத்தப்படும் தேசத்துரோகம். இது ஊழலின் புதிய பரிணாமம். நல்லதைப்போல சித்தரிக்கப்படும் நயவஞ்சகம். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையை மறைத்துவிட்டு அரசியல்வாதிகளையும்  அதிகாரிகளையும் மட்டுமே மக்களின் எதிரிகளாகக் காட்டும் கண்கட்டு வித்தை. உண்மையில் ஊழல் அமைச்சர்களும் அதிகாரிகளும் ‘எஸ் பாஸ்’என்று என்று முதலாளிகளுக்கு தொண்டூழியம் செய்யும் கையாட்களே. இந்தக் கொள்ளைக்கூட்டத்தின் உண்மையான ‘பாஸ்’ கார்பரேட் முதலாளிவர்க்கம் தான்.

1990 முதல் தனியார்மயக் கொள்கைகள் தீவிரமாக அமலாகத் தொடங்கிய பிறகுதான் ஊழல்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது; தொகையும் உயர்ந்திருக்கிறது; கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்தும் பல கோடியாக உயர்ந்திருக்கிறது. 200 ஆண்டுகளில் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிலிருந்து அடித்துச்சென்ற கொள்ளையை விட கடந்த 20 ஆண்டுகளில் இவர்கள் அடித்திருக்கும் கொள்ளை அதிகம் என்று கூறுகின்றன சர்வதேச ஆய்வு நிறுவனங்கள். எனினும் யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா, ஊழல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதா?

1991 முதல் 1996 வரை ஜெயா-சசி கூட்டம் தமிழகத்தை கொள்ளையடித்தது. அதைக்காட்டி ஆட்சிக்கு வந்த கருணாநிதி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவுக்கு எதிராக டஜன் கணக்கில் வழக்கு போட்டார். “வருமானத்துக்கு அதிகமாக 55 கோடி சொத்து சேர்த்தார்” என்ற ஒரு வழக்கு மட்டுமே பெங்களூரு நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கிறது. 55 கோடிக்கு 15 ஆண்டுகள் என்றால், 1,76,000 கோடிக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? இப்படியே வாய்தா ராணிகளுக்கும் வாய்தா ராசாக்களுக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு எந்த காலத்தில் நாம் ஊழலை ஒழிப்பது?

இன்று எல்லாவிதமான கொள்ளைகளும் சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கப் பட்டுவிட்ட நிலையில், எந்த சட்டத்தைக் காட்டி நீதிமன்றத்தில் வாதாடுவது? கொள்ளைதான் சட்டம் என்றாகிவிட்ட பிறகு, பறிமுதல் செய்வது தானே நீதியாக இருக்க முடியும்? கொலைதான் வழிமுறை என்று திரியும் ரவுடிகளுக்கு உருட்டுக் கட்டை தான் பதிலடி தரமுடியும். இராக்கின் எண்ணைய் வளத்தைக் கொள்ளை யடிப்பதற்காகவே அந்த நாட்டை ஆக்கிரமித்திருக்கிறது அமெரிக்கா. அவ்வாறு ஆக்கிரமிக்கும் வேலையே இல்லாமல், இந்தியாவின் வளங்களைப் பன்னாட்டு முதலாளிகளிகளுக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டு, 70 இலட்சம் கோடி ரூபாயை தமது பங்காக ஒதுக்கி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறது ‘கார்ப்பரேட் முதலாளிகள் – ஓட்டுப்பொறுக்கிகளின் கூட்டணி’. இவர்களுக்கும் உலகப் பெரும் கொள்ளையனான அமெரிக்காவுக்கும் என்ன வேறுபாடு? அங்கே இராக் மக்கள் ஆயுதத்தை எடுத்ததனால் தான் அமெரிக்காவுக்கு அச்சம் வருகிறது – இங்கே? ஆ.ராசாவோ அழகிரியோ மாறனோ அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்றா அஞ்சுகிறார்கள்? தோற்றே போனாலும். அவர்கள் கொள்ளையிட்ட மக்கள் சொத்து அடுத்த நூறு தலைமுறைக்குக் காணும்! தேர்தல் மூலம் தான் இவர்களைத் தாண்டிக்க முடியும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் வரை, அவர்களும் நோட்டை நோட்டை எண்ணிக் கொண்டிருப்பார்கள் – மக்களுடைய ஓட்டை விலை பேசுவதற்கு!

‘கல்லுளிமங்கன்’ மன்மோகன்

தேர்தல் மூலம் இவர்கள் யாரையும் தண்டிக்க இயலாது என்பது நாட்றிந்த உண்மை. எனினும் இந்த உண்மையைத் தங்கள் கொள்கையாகக் கொண்டிருப்பவர்கள் நக்சல்பாரிகள் மட்டும் தான். ‘வழக்கு, வாய்தா, தேர்தல், ஓட்டு’ என்று கொக்கு தலையில் வெண்ணைய் வைத்தி, 60 ஆண்டுகளில் ஒரு கொக்கு கூடப் பிடிபட வில்லை. திருடர்கள் நம் கண் முன்னால் திமிராக நடமாடுகிறார்கள், அவர்களுடைய திருட்டு சொத்துகளோ நம் கண் முன்னால் கட்டிடங்களாக உயர்கின்றன. கார்களாக பவனி வருகின்றன. நாம் அஞ்சி ஒதுங்கும் வரை அவர்களை அச்சுறுத்த முடியாது. நாம் சிறை செல்லத் தயாராக இல்லாதவரை, அவர்களையும் சிறைக்கு அனுப்பமுடியாது.

ஊழல் பெருச்சாளிகளை வீதிக்கு இழுப்போம்! மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வழங்குவோம்! அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்து மக்களுக்குப் பங்கிடுவோம்! நக்சல்பாரிப் பாதையில் திரள்வோம்!

***

* ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் அல்ல, கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!

அரசு கொள்கை முடிவின் படி, சட்டபூர்வமாகவே இதற்கு வழி வகுப்பது தான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம்!

*இந்தப் பகற்கொள்ளைக்கு பாதை வகுத்துக்கொடுத்து பங்கு வாங்குபவர்களே அதிகாரிகள், அரசியல்வாதிகள்!

*தனியார்மயத்தையும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தையும் ஒழிக்காமல் ஊழல் ஒழிப்பு என்று பேசுவது பித்தலாட்டம்!

*கார்ப்பரேட் முதலாளிகள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தப்பிக்கும் வகையில் வழக்கை ஜோடிப்பதுதான் சி.பி.ஐ-இன் சிறப்பு திறமை!

இவர்களை நிரபராதிகள் என்று விடுவிப்பது தான் உச்சநீதி மன்றம் உயர்நீதி மன்றங்களின் திருப்பணி!

*எந்த ஊழல் கூட்டணிநம்மைக் கொள்ளையிடுவது என்பதற்கு நாமே லைசன்சு கொடுப்பது தான் தேர்தல்!

எல்லா கார்ப்பரேட் கொள்ளையர்களையும், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் நாமே தண்டிப்பது தான் நக்சல்பாரிப் பாதை!

***

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க         : 94446 48879

பு.ம.இ.மு      : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு      : 98849 50952.

தொடர்புடைய பதிவுகள்:

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக நாளை  (26.12.2010) எட்டு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.

கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்

விலை ரூ. 40.00

ஈராக்: வரலாறும் அரசியலும்

பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 15.00

அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்

– வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
விலை ரூ. 10.00

விடுதலைப் போரின் வீர மரபு

– புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
விலை ரூ. 65

பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்

– உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
விலை ரூ. 55.00

நினைவின் குட்டை கனவு நதி

சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

– சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும் நூல், புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 70.00

மீண்டும் தொழிலாளி வர்க்கம்

வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 80.00

நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,

விலை ரூ. 110.00

_____________________________________________________________________

நூல் வெளியீட்டு விழா

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”

தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!

(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)

 

தொடர்புடைய பதிவுகள்

நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

அயோத்தி தீர்ப்பு…

இந்து மத வெறிக்கு சட்ட அங்கீகாரம்!

பாபர் மசூதியை இடிக்கும் பாசிச வானரங்கள்..

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!

மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?

ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?

நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?

1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?

கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?

1957 ல் அரசியல் அமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை எதிர்த்து பெரியார் அதன் நகலை எரித்து சிறை சென்றபோது, அம்பேத்கார் அதனை வரவேற்றது ஏன்?

1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?

1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?

500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?

இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?

அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?

அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?

அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?

ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய
ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?

அனைத்து கேள்விகளுக்கும் விடை காண வாருங்கள்…

அரங்கக்கூட்டம்

நிகழ்ச்சி நிரல்:

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை : ”நீதித்துறை பேசும் காவி மொழி”
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் : வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!
அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.

தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494.

தொடர்புடைய பதிவுகள்: