நாங்கள் கம்யூனிஸ்டுகள்..
மக்கள் மீதான எல்லா அடிமை விலங்குகளையும் உடைத்தெறியவே போராடுகின்றோம்.
நாங்கள் பாட்டாளிகள்..
நிலப்பிரபுத்துவ சாதிய ஒடுக்குமுறைகளையும் தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்திய, மறுகாலனிய ஒடுக்குமுறைகளையும் களைவதே எங்கள் லட்சியம்.
நாங்கள் சர்வதேசியவாதிகள்..
எந்த ஒரு தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும் வன்மையாக எதிர்க்கிறோம்.
புரட்சிகர தத்துவத்தை கொண்டும், மக்களை கொண்டும் அடிமைதளைகளை உடைத்தெறிவதே கம்யூனிஸ்டுகளாகிய எங்கள் லட்சியம்.
நாங்கள் மக்களை நேசிக்கின்றோம். மக்களுக்காகவே வாழ்கின்றோம். மக்களுக்காகவே போராடுகின்றோம்.
அதற்காக எதையும் தியாகம் செய்ய நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை..