அயோத்தி தீர்ப்பு…
இந்து மத வெறிக்கு சட்ட அங்கீகாரம்!
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!
மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?
ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?
நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?
1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?
கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?
1957 ல் அரசியல் அமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை எதிர்த்து பெரியார் அதன் நகலை எரித்து சிறை சென்றபோது, அம்பேத்கார் அதனை வரவேற்றது ஏன்?
1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?
1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?
500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?
இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?
அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?
அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?
அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?
ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய
ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?
அனைத்து கேள்விகளுக்கும் விடை காண வாருங்கள்…
அரங்கக்கூட்டம்
நிகழ்ச்சி நிரல்:
தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.
கருத்துரை : ”நீதித்துறை பேசும் காவி மொழி”
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.
“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.
“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
விவாத அரங்கம் : வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!
அனைவரும் வாரீர்!
நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி
இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.
தோழமையுடன் அழைக்கும்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.
தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494.
தொடர்புடைய பதிவுகள்:
- கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
- இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
- அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!- அசுரன்
- இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??
- அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!
- நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி
- குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
- முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
- “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!
- தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!
- போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!
- மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
- கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!
- ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!
- எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?
- 800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!
Pingback: Tweets that mention நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்! « சர்வதேசியவாதிகள் -- Topsy.com
‘சர்ச்சைக்குரிய இடம்’ யாருக்கு என்பதை, அலகாபாத் தீர்ப்பு அறிவிக்கும் பொழுது, இந்தியா முழுவதும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இந்திய அரசும், பல கட்சித் தலைவர்களும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனால், சொல்லப்பட்டதோ அயோக்கியதனமான தீர்ப்பு. அதற்குப் பிறகு காத்த அமைதியும் அநியாயமானது.
நாடு முழுவதும் உண்மையான ஜனநாயகம் குறித்து கவலைப்படுகிறவர்கள், நீதி மன்ற பாசிசத்தை அம்பலப்படுத்திட வேண்டும். அவர்கள் விரும்பும் “நீதி”க்கு வேண்டும் அமைதியை குலைக்க வேண்டும்.
அனைவரும் கலந்து கொள்ளவேண்டிய அவசிய கூட்டம் இது.