ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?

தோழர்களுக்கும், நண்பர்களுக்கும்,எமது எதிரிகளுக்கும் வணக்கம்.

தோழர் ஸ்டாலின் பெயரை உச்சரிக்கும் பொழுது நமக்குள் ஒரு மிடுக்கும், கம்பீரமும்,உற்சாகமும் உண்டாவதை தோழர்கள் அறிவீர்கள்.கம்யூனிச எதிரிகளோ ஸ்டாலின் என்கிற பெயரை கேட்டால் அச்சமும் பீதியும் கொண்டு அலறுகிறார்கள்.ஐரோப்பாவில் மட்டுமல்ல நமது ஊர்களில் கூட‌ ஸ்டாலின் என்ற பெயரை கேட்டாலே ஞானஸ்நானம் கொடுக்க வரும் பாதிரிமார்கள் கூட முகத்தை திருப்பிக்கொண்டு போய் விடுகிறார்கள்.

stalin

தோழர் ஸ்டாலின் மீது குற்றம் சுமத்துகின்ற,அவதூறு செய்கின்ற‌ அறிவாளிகள்
அத்தனை பேரும் ஸ்டாலினை மட்டும் அவதூறு செய்வதில்லை.நாங்கள் ஸ்டாலினை தான் விமர்சிக்கிறார்கள் மற்றபடி கம்யூனிசத்தை ஏற்கிறோம் என்று யாரும் சொல்வதில்லை. ஸ்டாலினை அவதூறு செய்கிற அனைவரும் கம்யூனிசத்தையும் கட்டோடு வெறுக்கிறார்கள்.இவ்வாறு ஸ்டாலின் சர்வாதிகாரி என்று அவதூறு செய்கிற அத்தனை பேரும் முதலாளித்துவ சுரண்டலையும், ஒடுக்குமுறையையும், சர்ர்வாதிகாரத்தையும் பல வகைகளிலும் நியாயப்படுத்துகிறார்கள்.

எங்கே மீண்டும் ஸ்டாலினுடைய ஆவி எழுந்து வந்துவிடுமோ என்று அஞ்சி இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆன‌ பிறகும் அவரைப்பற்றிய அவதூறுகளை முதலாளித்துவ தொடை நடுங்கிகள் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்கள். இதற்கு தமிழகமும் விதி விலக்கல்ல, தமிழ்நாட்டில் உள்ள இலக்கியவாதிகள் முதல் சினிமாக்காரன் வரை அனைவருக்கும் ஸ்டாலின் ஜீரம் பிடித்தாட்டுகிறது. தமிழ் பதிவுலகிலும் சில மனநிலை பாதிக்கப்பட்ட பரிதாப்பத்திற்குறிய பிறவிகள் ஸ்டாலின்-சர்வாதிகாரம்- சோவியத்- கமிசார்கள் என்று பினாத்திக்கொண்டு இணைய வெளிகளில் அலைந்து திரிகின்றன. இவ்வாறு அவதூறு செய்கிறவர்களில் இரண்டு வகை உண்டு ஒன்று அ.மார்க்ஸ்,எஸ்.வி. ராஜதுரை அறிவாளி வகையறா, இரண்டாவது ஜெயமோகன், K.Rஅதியமான்,அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவ கோமாளிகளின் கூட்டம்.இந்த‌ இரண்டு தரப்புக்கும் இடையே பல கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இரண்டும் ஒன்றுபடும் ஒரு புள்ளி  இருக்கிறது, அது தான் கம்யூனிச எதிர்ப்பு. பித்தம் தலைக்கு ஏறிப்போய் கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளை மட்டுமே எழுதும் ஒரு நபர் தமிழ் பதிவுலகில் இருக்கிறார்,அவர் தான் தமிழ்மணி.இவருக்கு கம்யூனிச எதிர்ப்பு என்பது படித்து பெரிய ஆள் ஆன பிறகு ஏற்பட்டது இல்லையாம், பிறக்கும் போதே இவர் கம்யூனிச எதிர்ப்பாளனாகத் தான் பிறந்தாராம். அந்தளவிற்கு முதலாளித்துவ வெறி , தோழர் ஸ்டாலின் மீது பயம்!

தோழர் ஸ்டாலின் பற்றியோ கம்யூனிசம் பற்றியோ அறிந்திராத புதிய நபர்கள்
இது போன்றவர்களின் பொய்களையும் அவதூறுகளையும் வாசிக்க நேரிடும் போது அவற்றை உண்மை என்று கூட‌ நம்பி விடும் அபாயமும் உள்ளது. இவர்கள் ஸ்டாலின் பற்றியும் சர்வாதிகாரம் பற்றியும் எந்த அடிப்படையிலிருந்து பேசுகிறார்கள். இவர்கள் கூறும் ‘உண்மை’ எங்கிருந்து எடுக்கப்படுகிறது ? அனைத்து தரவுகளையும் இவர்கள், மேற்குலக நாடுகள் லட்சக்கண‌க்கில் மலிவு விலையில் அச்சடித்து போட்ட ஸ்டாலின் பற்றிய திகில் கதைகளிலிருந்து தான் எடுக்கிறார்கள்.இதில் ஒன்றாவது உண்மையா என்றால் இல்லை. ஸ்டாலின் பற்றிய‌ புத்தகங்களை லட்சக்கணக்கில் அச்சடித்து சந்தைக்கு இறக்கிய அனைவரும் அமெரிக்கா ஐரோப்பாவின் மிகப்பெரிய முதலாளித்துவ முதலைகள் யாரும் நேர்மையான பத்திரிகையாளர்கள் கிடையாது. முதலாளிகளுக்கு ஸ்டாலின் சர்வாதிகாரி தான்.அதனால் தான் அவர்கள் ஸ்டாலின் என்கிற பெயரை கேட்டாலே இப்போது உட்கார்ந்த இடத்திலேயே கக்கா போகிறார்கள்.

தமிழ் பதிவுலகில் தோழர் ஸ்டாலின் பற்றிய செய்யப்பட்டுவரும் பொய் பிரச்சாரங்களையும், அவதூறுகளையும் அம்பலமாக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த பதிவு எழுதப்படுகிறது. புதிய நபர்களுக்கும், இளைஞ‌ர்களுக்கும் ஸ்டாலின் பற்றிய‌ பொய்களை விலக்கி உண்மையை காட்டும் நோக்கில் தான் இந்த பதிவு எழுதப்படுகிறது.கம்யூனிசத்தை பற்றியும் கம்யூனிச கொள்கையை உயர்த்தி பிடித்த மேதைகளை பற்றியும் இன்றைய சூழலில் அறிந்து கொள்வதென்பது முக்கியமானது.அதன் முன்னெடுப்பாக தோழர் ஸ்டாலினை பற்றிய வரலாற்று நிகழ்வுகளை சர்வதேசவாதிகள் தளத்தில் புதிய நபர்களுக்காகவும், கம்யூனிசத்தின் மீது பற்று கொண்டோருக்காகவும்,அவதூறுகளை உண்மை என நம்பியவர்களுக்காகவும் நாம் பதிக்கவிருக்கிறோம்.  தோழர் ஸ்டாலினை பற்றியும் அவர் காலத்திய‌ வரலாற்றை பற்றியும் பதிவு செய்ய வேண்டும் என்றால் அவற்றை ஒன்று இரண்டு பதிவுகளுக்குள் அடக்க  முடியாது என்னும் காரணத்தினால் சில தொடர் பதிவுகளாக எழுத‌லாம் என்னும் நோக்கில் நாம் பயணிக்க இருக்கிறோம். தோழர் ஸ்டாலின் பற்றிய பதிப்பு பதிக்கும் முன்னர் அவரின் தனிமனித குணாம்சங்கள்,அவரின் ஆளுமை, அவரின் மீதான விமர்சனங்கள் ஆகியவைகளை பற்றி நம்முடைய பார்வை.

stalin2

வரலாற்றின் மாபெரும் புரட்சி நாயகர்களில் ‘ஜோசப் ஸ்டாலின்’ தனிப் பெருமை பெற்று விளங்குகிறார். அவர் மார்க்ஸிய லெனினியத்தின் சிறந்த மாணவனாக‌த் திகழ்ந்தார். தோழர் ஸ்டாலின் தலைமையிலான ரசியா வின் புரட்சிகர நடவடிக்கைகள் ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தது. மனித குல முன்னேற்றத்துக்குப் புதிய திசையைக் காட்டியது. மார்க்ஸிய லெனினிய–கோட்பாடுகளின் ஒளியில் மனித குலத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு. சோவியத் ரசியாவை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல அவர் மாபெரும்  இருந்தார்.அவர் மீதான  ‘தனி நபர் வழிப்பாட்டு முறை’ என்னும் குற்றச்சாட்டை கம்யூனிச  எதிர்ப்பாளர்கள் வைக்கின்றனர். ஆனால்  ‘தனி நபர் வழிபாட்டு’ முறைக்கு காரணமாக ஸ்டாலின் இருக்கவில்லை.

பின் யார் இதை துவக்கியது? யார் இதை பரப்பியது? யார் இதை நீட்டிக்க செய்தது? குருஷேவ், காரல்ரதேக், அனஸ்தாஸ் மிகோயான் மற்றும் திருத்தல்வாதிகள் என்பதே இதற்கு பதிலாகும்.

ஸ்டாலின் தவறுகள் செய்தார். எவர்தான் தவறுகளே செய்யாதவர்?

‘தவறுதல் மனித இயல்பு’ ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ, தேவதூதரோ அல்ல. ஆனால் ஒரு மனிதரை மதிப்பிடும்போது அவரது தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதும், அவரது மேன்மைகளையும் வரலாற்று பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்வதும் சரியல்ல.

தோழர் ஸ்டாலின் விமர்சங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல. ஒரு கம்யூனிஸ்டுக்கு சுயவிமர்சனம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை தோழர்களுக்கு எடுத்து காட்டியவர் தான் தோழர் ஸ்டாலின்.

சுயவிமர்சனம் குறித்து ஸ்டாலின் கூறியது.

”நமது கட்சியின் தொண்டர்களில் பலர் சுயவிமர்சனத்தை விரும்புவதில்லை என்பதை நான் அறிவேன்.நமது கட்சியின் உணர்வுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் இவர்கள்.சுயவிமர்சனம் என்ற கோசத்தைப் புதிய ஒன்றாக கருத முடியாது. கட்சியின் அடைப்படையாக அது உள்ளது. ஒரு கட்சியால் கம்யூனிஸ்டு கட்சியால் வழி நடத்தப்படும் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ நமது நாட்டில் உள்ளதால் நாம் முன்னேற விரும்பினால் நமது குறைகளை நாமே வெளிப்படுத்தி சரி செய்து கொள்ள வேண்டும். நமது வளர்ச்சியின் மிக முக்கிய உந்து சக்தியாக சுயவிமர்சனம் இருக்க வேண்டும்.”

தலைவர் தொண்டர்களுடான உறவை பற்றிகூட தோழர் ஸ்டாலின் நீண்ட உரையாற்றியிருக்கிறார்.

“அண்மை காலத்தில் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு விசித்திரமான உறவு முறை தொடங்கியிருக்கிறது. ஒரு பக்கம் பொது மக்களால் நெருங்க முடியாதவர்களாக தலைவர்கள் மாறி இருக்கிறார்கள். மறுபக்கம் உழைக்கும் வர்க்க வெகுமக்கள் கண் இமைக்காது கீழிருந்து மேல் நோக்கி தலைவர்களைக் காணத் தொடங்கியிருக்கிறார்கள். அரிதாகக் கூட அவர்களை விமர்சனம் செய்ய அஞ்சுகின்றனர். பொது மக்களின் தொடர்பை இழக்கும் தலைவர்கள், தலைவர்களிடமிருந்து விலகிச் செல்லும் பொதுமக்கள் என்ற நிச்சயமான அபாயம் இதனால் ஏற்படுகிறது.. இந்த அபாயம் தலைவர்களை இறுமாப்புடையவர்களாக ஆக்கிவிடும், தவறே செய்யாதவர்கள் என்று தன்னை பற்றி கருத வைக்கும். உயர் தலைவர்கள் தற்பெருமை கொண்டவர்களாக மாறி பொது மக்களை கீழானவர்களாக பார்த்தால் என்ன நன்மையை எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக இதிலிருந்து கட்சிக்கு அழிவு தவிர வேறு எந்த பயனும் ஏற்படாது. பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்த சுயவிமர்சனம் என்ற வால்வை எல்லா நேரங்களிலும் திறந்து வைத்திருக்க வேண்டும். சோவியத் மக்கள் தங்களின்  தலைவர்களை எந்த நேரத்திலும் சந்திப்பதற்கும் அவர்களின் தவறுகளை விமர்சனம் செய்வதற்கும் சாத்தியமான நிலையை நாம் உருவாக்க வேண்டும்.இதன் மூலம் தலைவர்கள் இறுமாப்பு கொண்டவர்களாக மாறமாட்டார்கள்.தங்களின் மக்களிடமிருந்து விலகி செல்ல மாட்டார்கள்.

stalin_childhoodஇரண்டாம் உலகப் போரில் தன் மகனை பறிகொடுத்து தன் தாய்மண்ணை காக்க மக்களை வழிநடத்தி இங்கிலாந்து,அமெரிக்காவும் அஞ்சி நடுங்கிய‌ பாசிச ஹிட்லரை வீழ்த்தி பாசிச கரங்களில் பிடிபட்டிருந்த‌ மக்களை விடுவித்தவர் தோழர் ஸ்டாலின், அவருடைய‌ ஆளுமை திறனை யாராலும் மறுக்க இயலாது.

தோழர் ஸ்டாலின் எளிமையாகவே தன் வாழ்நாளை கழித்தவர். ஹென்றி பார்ஸ் என்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஸ்டாலின் வாழ்க்கை முறை பற்றிய சித்திரத்தை தீட்டிக்காட்டுகிறார்.

”ஒருவர் முதல் மாடிக்கு சென்றால் மூன்று ஜன்னல்களில் வெள்ளை திரை சீலைகள் தொங்கக் காணலாம். இந்த மூன்று ஜன்னல்களுக்குள் தான் ஸ்டாலின் வீடு.அந்த சிறிய ஹாலில் சட்டை மாட்டும் கொம்பில் ஒரு தொப்பிக்குப் பின்னால் நீளமான ராணுவ அங்கி தொங்கிக் கொண்டிருந்தது. இந்த ஹாலோடு இரண்டு படுக்கை அறைகளும் ஒரு சாப்பிடும் அறையும் இருந்தது.படுக்கை அறைகள் மிகவும் எளிய முறையில் அமைந்திருந்தன. மூத்த மகன் யாகூவ் இரவு நேரத்தில் சாப்பாட்டு அறையில் போடப்பட்டிருந்த படுக்கையாக மாற்றப்பட்ட சோபாவில் தூங்கினான்.இளைய மகன் வாசிலி அறையின் ஒதுக்கு புறமாய் இருந்த ஒரு சிறிய இடத்தில் தூங்கினான்.அவரது மாத வருவாய் ஐநூறு ரூபிள்கள்.மிகவும் குறைவான இந்த ஊதியம் தான் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இன்றைய போலி ஜனநாயகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முதல் நகராட்சி கவுன்சிலர் வரை செய்யும் ஊழல் நமது நாட்டில் தலைவிரித்தாடுகிறது.இதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.ஆனால் ஸ்டாலின் மீதான அவதூறு வீசுபவர்களும் அவர் மீது ஊழல் பற்றிய வார்த்தைகளை உதிர்க்க கூட முடியாத அளவிற்கு அவர் நேர்மையாகவே தன் வாழ்நாளை கழித்தார்.

தனது கொள்கையில் தெளிவு,விமர்சனம் சுயவிமர்சனம், எளிமையான வாழ்க்கை,கம்யூனிஸ்ட் ஆளுமை இவைகளே ஒருவரை நல்ல தலைவராக உருவாக்கும் பண்புகள். இவைகளே தோழர் ஸ்டாலினையும் தலைவராக உருவாக்கியது.

-இனி அடுத்த பதிப்புகள் தொடர் பதிப்புகளாக

நம் தளத்தில் வெளிவரும்…


தொடர்புடைய இடுகைகள்

ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 1

ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2

அவ‌தூறுகளுக்கு ஓர் மறுப்பு ரசியப்புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்ராலின்:எஸ்.பாலச்சந்திரன்

சோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்! அசுரன்

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்! அசுரன்

மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!! அசுரன்

ஸ்டாலின் எதிர்ப்பில் ஒரு தமிழ்நாட்டு வானவில் கூட்டணி!

78 responses to “ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?

  1. ஒரு வங்கிக் கொள்ளைக்காரர், கடத்தல்காரர், லட்சக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஸ்டாலின். அவங்க நாட்டு மக்களையே நாடு கடத்தினவர் ஸ்டாலின். கம்யூனிசக் கொள்கைகளை மறுக்காதவர்கள் கூட, ஸ்டாலினை ஏற்க மாட்டார்கள். இதில் எது பொய் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

    எனக்குத் தெரிந்த ஸ்டாலின் இவர் தான்.

    • உலகையே தன் காலடியில் வீழச்செய்ய நாடுபிடிக்கும் பேராசையுடன் பாசிசவெறியோடு இரண்டாம் உலகப்போரை நிகழ்த்தினான் கொடுங்கோலன் இட்லர்,அப்பாசிச தாக்குதலை முறியடித்து அவனையும் அவன் காதலியையும் தற்க்கொலை செய்துகொண்டு சாகச்செய்யும் அளவுக்கு செம்படையை வழி நடத்தி வெற்றி கண்டான் மாவீரன் தோழர் ஸ்டாலின்.போர் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது சாதாரன சிப்பாயான ஸ்டாலின் மகனை பிடித்து வைத்திருந்தது இட்லர் படை,அதே நேரம் இட்லரின் இரானுவத்தளபதி ஒருவனை செம்படை பிடித்து வைத்திருந்தது.
      உன் மகனை விடுவிப்பதாக இருந்தால்,என் தளபதியை விடுதலை செய் என இட்லர் பேரம் பேசினான் .ஒரு பாசிசம் அழிவதைவிட என் மகன் உயிர் பெரிதல்ல,உன் தளபதியை விடுதலை செய்ய முடியாது என தனது உயர்ந்த மான்பை உலகுக்கு காட்டியவர் தோழர் ஸ்டாலின்.தன் வாரிசுகளுக்கு இந்த நாட்டையும் உலகையும் கூறு போட எத்தனிக்கும் தலைவர்கள் மலிந்துள்ள இக்காலச்சூழலில் ஸ்டாலின் போன்ற மாவீரர்களை கொச்சைப்படுத்த எவனுக்கு அருகதை இருக்கிரது?

    • சர்வதேசியவாதிகள்

      இதில் உண்மை எது என்று நீங்கள் சொல்லுங்கள். எல்லாமே பொய் தான்.

      நீங்கள் ஹிட்லரை பற்றி படித்துவிட்டு வந்து ஸ்டாலின் என்று பெயர் மாற்றி விவாதிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    • ஜூலிஸ் பூசிக்

      எனக்குத் தெரிந்த ஸ்டாலின் இவர் தான் என்று அளவோடு அளந்துவிட்டீர்கள். மேம்பாலத்தில் ஊழல் செய்தவர். இலவச தொலைக்காட்சி பெட்டியில் பணத்தை சுருட்டியவர். சுருளான தலைமுடி என்று சொல்லாமல் விட்டீர்களே. நன்றி

  2. மகிந்த ராஜபக்ஷவும் ‘அரசியல் கோமாளி’ கருணாநிதியும்……hot news read it from…www.onelanka.wordpress.com

  3. உண்மையைச் சொல்றவன்

    //ஒரு வங்கிக் கொள்ளைக்காரர், கடத்தல்காரர், லட்சக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஸ்டாலின். அவங்க நாட்டு மக்களையே நாடு கடத்தினவர் ஸ்டாலின். கம்யூனிசக் கொள்கைகளை மறுக்காதவர்கள் கூட, ஸ்டாலினை ஏற்க மாட்டார்கள். இதில் எது பொய் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

    எனக்குத் தெரிந்த ஸ்டாலின் இவர் தான். //

    கபிலனுக்கு தெரிந்த இன்னொரு விசயம். ஆர் எஸ் எஸ் ஒரு காலாச்சார அமைப்பு என்பது ஆகும். வரலாற்றையும், உண்மையையும் தலைகீழாக படிக்கக் கற்றுக் கொண்டவர்கள் இவர்கள். தமது சாப்பாட்டு தட்டைத் தாண்டி சிந்திக்க பழகியிராதவர்கள் இவர்கள்.

  4. கபிலன் அய்யா அவர்களே உங்களை மாதிரி முதலாளித்துவ அவதூறுகளை நம்பும் ஆளுங்களுக்கு தான் சர்வதேசவாதிகள் இதை எழுதியிருக்காங்க. சும்மா ஸ்டாலின் ஸ்டாலின்னு பயத்துல உளறாதீங்கோ..

    ஆதாரங்களோட எதுனா இருந்தா மட்டும் பேசுங்க.

  5. “‘தவறுதல் மனித இயல்பு’ ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ, தேவதூதரோ அல்ல.”
    இது தேவையற்ற‌ வரிகள் என்று நினைக்கின்றேன்.

    • சர்வதேசியவாதிகள்

      தோழர், விளக்கமாக கூறினால் திருத்துவதற்கு வசதியாக இருக்கும்.

      • “‘தவறுதல் மனித இயல்பு’ ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ, தேவதூதரோ அல்ல.”

        தோழர்களே, கடவுளும் ஒரு கம்யூனிஸ்டும் ஒன்றானவர்களா? மாயையான கடவுள், சுரண்டும் வர்க்கத்திற்காக ஆண்டைகளுக்காக பேசியவன். மனிதர்களுக்கிடையேயான வர்க்க ஏற்றத்தாழ்வை இயற்கை என்றவன். தேவதூதர்கள் அதை வழிமொழிந்தவர்கள். ஆனால் கம்யூனிஸ்டு இதற்கெதிராக போராடியவர்கள். வர்க்க ஏற்றத்தாழ்வை உடைத்தெறிந்தவர்கள். கம்யூனிஸ்டுகள் தவறு செய்யவில்லை என நான் கூறவரவில்லை. கம்யூனிஸ்டுகள் தன்னுடைய தவறிற்கு சுயவிமர்சனம் ஏற்று பரிசீலனைக்குட்படுத்தி மாற்றிக்கொள்பவர்கள். தவறிற்காக மல்லுக்கட்டுபவர்கள் அல்ல. ஆனால் தேவதூதர்கள் “எல்லாம் விதி” என்று மக்களை மடையர்களாக்கியவர்கள். இங்கு எதுவும் மறுபரிசீலனைக்குட்படுத்தப்படமாட்டாது. இவர்களின் தத்துவங்களும் கொள்கைகளுமே முதன்மையான‌ தவறுகள்.
        தவறு செய்யாத தேவதூதர்கள் இருக்கிறார்களா!

    • நந்தகுமார்

      அவ்வாறு கூறியதில் தவறு ஒன்றும் இல்லையே நண்பர் ஏகலைவன்.
      என்ன பொருளில் நீங்கள் அதை தவறு என்று சொல்கிறீர்கள் ?

      விளக்க முடியுமா ?

  6. உழைக்கும் மக்களின் மாபெரும் தலைவன் ஸ்டாலினை பற்றி குற்றம் சொல்கிற‌ கூமுட்டைகள் எல்லாம் முன்மொழிகிற தலைவர்கள் யார் தெரியுமா ?

    மாமா மன்மோகன் சிங்

    அய்யிரு அப்துல்கலாம்

    நாட்டை கூறு போட்டு விக்கிற
    வியாபாரி செட்டி நாட்டு சிதம்பரம்

    போதைக்காரன் மாண்டேக் சிங் அலுவாலியா

    இவனுங்களை எல்லாம் தலைவனா வச்சிக்கிட்டு இவனுங்களுக்கு கீழ அடிமைகளை போல வாழுகிற இந்த ஜென்மங்கள் தான் நூறு சதவீதம் மக்களுக்கும் உணவும் உடையும் கல்வியும் வீடு வேலையும் கொடுத்த சோவியத் நாட்டை கட்டியமைத்த தோழர் ஸ்டாலினை பார்த்து சர்வாதிகாரி என்று ஊளையிடுகின்றன.

    நீயே அடிமை உன‌க்கு ஏன் அடுத்தவனை பற்றிய கவலை ? முத‌லில் உன்னோட அடிமை விலங்கை ஒடிச்சிட்டு சுதந்திர மனிதனாக நடங்கடா அப்புறமா மத்தவங்களை பத்தி பேசலாம்.

  7. நாம் பெருமையோடு சொல்லுவோம் ஆம் அவர் சர்வாதிகாரிதான்,
    பிற்போக்காளர்களும் புறம்போக்குகளும் தூற்றுங்கள் எங்கள் தலைவரை, நாங்கள் பெருமைப்படுவோம். நீங்கள் புகழ்வது தான் எங்கள் தலைவருக்கு இழுக்கு என்பதயும் யாம் அறிவோம். அப்போதல்ல அவர் இறந்து 50 ஆண்டுகள் ஆன பின்னும் உழைக்கும் மக்களின் எதிரிகள் வயிற்றில் அவரின் பெயரே இப்படி ஒரு நடுக்கத்தை ஏற்படுத்துகிறதே. ஆகா என்ன ஒரு மகிழ்ச்சி.

    உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்த உன்னத தோழர் ஸ்டாலின், அவரை கொச்சை படுத்தும் மூடர்களே ஒன்றூ தெரியுமா மாஸ்கோவை உங்கள் இட்லர் நெருங்கிய போது அங்கிருந்து பின்வாங்காத தலைவர் எங்கள் தோழர் தான். உங்கள் இந்தியத்தின் ஆசன வாய்தலைவர்கள் சீனப்போரின் போது எங்கே ஓடிப்போனார்கள் என்பதனை கொஞ்சம் விலாவரியாக விளக்கிவீர்களா?

  8. திட்டினவங்க எல்லோருக்கும் நன்றி : ) யாரையும் புன்படுத்துவதற்காக நான் பின்னூட்டம் செய்யல. என்னுடைய கருத்துக்களைச் சொன்னேன். அவ்வளவு தாங்க. சரி மேட்டர்க்கு வருவோம்…

    நான் குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் விக்கிப்பீடியாவில் மிகத் தெளிவாக உள்ளது. இந்த பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் அங்கு சென்று பாருங்கள், யார் சொல்வது உண்மை என்று புரியும். அதில் தவறு இருப்பின் தாங்களே எடிட் செய்யுங்கள்.

    http://en.wikipedia.org/wiki/Stalin

    “தோழர் நாகராசன்
    உலகையே தன் காலடியில் வீழச்செய்ய நாடுபிடிக்கும் பேராசையுடன் பாசிசவெறியோடு இரண்டாம் உலகப்போரை நிகழ்த்தினான் கொடுங்கோலன் இட்லர்,அப்பாசிச தாக்குதலை முறியடித்து அவனையும் அவன் காதலியையும் தற்க்கொலை செய்துகொண்டு சாகச்செய்யும் அளவுக்கு செம்படையை வழி நடத்தி வெற்றி கண்டான் மாவீரன் தோழர் ஸ்டாலின்”

    ஹிட்லரின் நாசி கட்சியும், சோவியத்தின் ஸ்டாலினும் சேர்ந்து போட்டுக் கொண்ட ஒப்பந்தம் தான் Non-Aggression pact அல்லது ஹிட்லர்-ஸ்டாலின் பேக்ட். இந்த ஒப்பந்தத்தை மீறி ஹிட்லர் சோவியத்தைப் படையெடுத்ததால்(ஆபரேஷன் பார்பரோசா) தான் இவ்விருவரும் எதிரிகளாக மாறினர் என வரலாறு சொல்கிறது.

    ஆனால் கூறிய நிகழ்வுகளில் இது தவறு, அது தவறூ என்று இதுவரை இங்கு கருத்துக் கூறியவர் யாரும் சொல்லவில்லை. அதற்கு மாறாக, முதலாளித்துவ சிந்தனையாளர், ஆர்.எஸ்.எஸ். காரன் எனப் பழிக்கிறீர்கள். நியாயமாக அவர் அப்படிப்பட்டவரல்ல என்பதைத் தானே விளக்கி இருக்க வேண்டும். தவறு என்று நிரூபியுங்கள், நிச்சயம் கருத்தை மாற்றிக் கொள்கிறோம். சரி விடுங்க. இதெல்லாம் தோழர்களின் பின்னூட்டங்களின் சகஜம் என்பது அனைவரும் அறிந்ததே. பிடல் கேஸ்ட்ரோ, சேகுவேரா வைப் போராளிகள்,தலைவர்கள் எனச் சொல்லுங்கள், பொருந்தும். ஜோசப் ஸ்டாலின் சரியான உதாரணம் அல்ல என்றே தோன்றுகிறது.

    • சர்வதேசியவாதிகள்

      விக்கிபீடியாவில் யார் என்ன வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளலாம் என்பது நீங்கள் உட்பட இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. விக்கிபீடியாவில் உள்ளதெல்லாம் உண்மையென்று ஆகாது. உங்களுக்கு சார்ப்பாக நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம். எங்கள் சார்பாக நாங்கள் எடிட் செய்து கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் அவர்களுக்கேற்றார்போல் எடிட் செய்து கொள்ளும் Open Source தான் அது. அதிலிருந்து எடுத்தேன் என்று விவாதத்திற்கு ஆதாரமாக காட்ட முடியாது.
      10 புத்தகங்கள் ஸ்டாலின் பற்றி இருந்தால் அதில் 8 புத்தகங்கள் அவதூற்றை பரப்பும் விதமாகவே இருக்கும். அதில் உண்மையான வரலாற்று நிகழ்வுகளை பதித்து ஆதாரங்கள் உள்ள புத்தங்கள் என்று சொற்பமாகவே இருக்கும்.
      “ஸ்டாலின் சகாப்தம்” என்னும் நூல் ‘அன்னா லூயி ஸ்ட்ராங்’ என்னும் இங்கிலாந்து பத்திரிக்கையாளரால் எழுதப்பட்டது. நேர்மையான பதிப்பாகவே அவருடைய எழுத்து அமைந்துள்ளது.
      “மாபெரும் சதி” என்னும் நூலை ‘மைக்கேல் சேயர்ஸ்’ & ‘ஆல்பர்ட் இ.கான்’ என்பவர்கள் எழுதியுள்ளார்கள்.
      ஸ்டாலின் மீதான பொய் பிரச்சாரங்களை மேற்கூறிய புத்தகங்கள் தகர்க்கும்.
      தமிழிலும் கிடைக்கின்றன.

      ஹிட்லரும் ஸ்டாலினும் சேர்ந்து போட்ட ஒப்பந்தம் என்பது செயல் தந்திரத்தின் அடிப்படையில் போட்டது. ஒப்பந்தமே போடக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. உலகச் சூழலில் அமெரிக்கா இங்கிலாந்து ஏகாதிபத்தியங்களுக்கு நடுவிலும், ஹிட்லரின் ஜெர்மனி பாசிச நெருக்கடிக்கு இடையிலும் மாட்டிக்கொண்ட ரஷ்யாவை இந்த ஒப்பந்தம் என்னும் செயல் தந்திரத்தின் மூலம் ரஷ்யாவை நெருக்கடியிலிருந்து காக்கும் அடிப்படையில் போடப்பட்டது. எனினும் ஹிட்லரின் பாசிச வெறிக்கு முடிவு கட்டியது தோழர் ஸ்டாலின் தலைமையிலான செம்படை என்பதை யாரும் மறுக்கமுடியாத உண்மை.

      நீங்கள் மறுக்கிறீர்களா?

      • அது என்ன செயல் தந்திர அடிப்படை?!! ஹிட்லர் ஒரு கொடுங்கோலன் என்பது பாவம் பச்சை புள்ள ஸ்டாலினுக்கு தெரியாதா? அதாவது நீ என்ன வேனா செய்து கொள் சோவியத்தை மட்டும் தொடதே. பச்சை சுயநலம். அப்புறம் என்ன சர்வதேசியவாதமும் கம்யூனிசமும். தன்னை தொடாமல் இருந்திருந்தால் இரண்டாம் உலக போரில் ஹிட்லர் செய்த எந்த கொடுமையையும் கேள்வியின்றி ஏற்றுகொண்டிருப்பார் சர்வதேச‌ பாட்டளி வர்க்க பேராசான் ஸ்டாலின் என்பது மட்டுமே மறுக்க முடியாத‌ உன்மை. நெருக்கடி! ஹும் கயவாளித்தனதுக்கு இப்படியும் பெயர் சூட்டலாம்.
        மக்களின் தலைவனாக இருந்திருந்தால் 1989’ல் அவர் சிலைகள் தகர்க்கபட்ட போது மக்கள் அதற்க்கு எதிராக திரண்லெழுதிருப்பார்கள். அவர் மக்களின் எதிரி எனவே தான் அவர் சிலையை தகர்த்த போது கை தட்டி ஆரவரித்தார்கள், பட்டது அவர்கள் தானே எவனொ கனடா காரனும் சர்வதேசியவாதியும் அல்லவே.

      • தோழர் ஸ்டாலின் சுயநலத்துடன் ரசியாவை மட்டும் காப்பாற்றிக் கொண்டாரா ? இவ்வாறு சென்னால் அது பாசிச‌ இட்லருக்கு செய்யும் கைக்கூலித்தனம் என்று தான் பொருள் படும், ஆனால் நான் உங்களை அவ்வாறு சொல்லவில்லை. நீங்கள் சொல்வது அவ்வாறு பொருள்படுகிறது. எனவே முதலாளித்துவ முட்டாள்கள் செய்யும் அவதூறுகளை அப்படியே அள்ளிப்பருகாமல் கொஞ்சம் சிரமம் பாராமல் ஸ்டாலின் பற்றிய நல்ல நூல்களை தேடிப்படியுங்கள் அது மட்டும் தான் நீங்கள் உண்மையை அறிய உள்ள ஒரே வழி.

        ஸ்டாலின் பற்றி கம்யூனிஸ்டுகள் அல்லாத பிற முதலாளிய அறிவுஜீவிகள் பத்திரிகையாளர்கள் எழுத பல நூல்களை பற்றியும் இங்கே தோழர்கள் பதிவிலும் பின்னூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள், பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

      • தோழர் நிழல் மற்றும் நான் வைத்த ஸ்டாலின் பற்றிய சாரமான அவதானிப்பை/ கேள்வியை ஒதுக்கி விட்டு, எங்களின் ‘பொதுவுடமை’ தத்துவதின் மீதான புரிதல் பற்றிய சந்தேகத்தை கிளப்புவதன் மூலம் விவாதத்தை வெற்றிகரமாக திசை திருப்பிய அனைவருக்கும் நன்றி. எனது முந்தைய மாற்றீடு
        ///அது என்ன செயல் தந்திர அடிப்படை?!! ஹிட்லர் ஒரு கொடுங்கோலன் என்பது பாவம் பச்சை புள்ள ஸ்டாலினுக்கு தெரியாதா? அதாவது நீ என்ன வேனா செய்து கொள் சோவியத்தை மட்டும் தொடதே. பச்சை சுயநலம். அப்புறம் என்ன சர்வதேசியவாதமும் கம்யூனிசமும். தன்னை தொடாமல் இருந்திருந்தால் இரண்டாம் உலக போரில் ஹிட்லர் செய்த எந்த கொடுமையையும் கேள்வியின்றி ஏற்றுகொண்டிருப்பார் சர்வதேச பாட்டளி வர்க்க பேராசான் ஸ்டாலின் என்பது மட்டுமே மறுக்க முடியாத உன்மை. நெருக்கடி! ஹும் கயவாளித்தனதுக்கு இப்படியும் பெயர் சூட்டலாம். மக்களின் தலைவனாக இருந்திருந்தால் 1989′ல் அவர் சிலைகள் தகர்க்கபட்ட போது மக்கள் அதற்க்கு எதிராக திரண்லெழுதிருப்பார்கள். அவர் மக்களின் எதிரி எனவே தான் அவர் சிலையை தகர்த்த போது கை தட்டி ஆரவரித்தார்கள், பட்டது அவர்கள் தானே எவனொ கனடா காரனும் சர்வதேசியவாதியும் அல்லவே.///
        அதற்க்கு மார்க்சிய மாணவன் ஒரு அஜலகுஜல’வான பதிலாய் என்னை புத்தகங்களை தேடி படிக்க சொண்னார்! இந்த விவாதம் வெகுவாய் திசை மாறி போயிருப்பினும் எதோ ஒரு நேர்மையான மார்கிசியனுக்கு இந்த கேள்வியை முன் வைக்கிறேன்.
        “நேரடியாக பதில் கூறுங்கள் சுற்றி வளைத்து பேச வேண்டாம்! 1939 அகஸ்டில் கையெழுத்து இட்டு விட்டு, 1939 செப்டம்பரில் இருந்து 1941 வரை ஸ்டாலின், ஹிட்லரின் அராஜகமான அய்ரோப்பியா மீதான இரானுவ படைஎடுப்பை ஏன் கேள்வி ஏதும் இன்றி ஏற்றுகொண்டார்? மனித குலம் கொத்து கொத்தாக கொன்றொழிக்கபட்டு கொண்டிருந்த போது எஙகே ஒளிந்து கொன்டிருந்தார் சர்வதேச பாட்டாளி வர்க்க தோழர் ஸ்டாலின்? செத்து கொண்டிருந்தவர்கள் மனிதர்கள் இல்லையா? பாட்டளிகள் இல்லையா? அல்லது சோவியத் பிரஜைகள் இல்லையா? எதனால் மொளனம் காத்தார் அந்த கோழை.
        காந்தியும் காங்கிரசும் ஒழியனும் என மேடைதோறும் அறைகூவல் விடுத்து கொண்டிருந்த பெரியாரை போல் (ஓரு ஒப்பீட்டுகாக மட்டும் சொல்கிறேன் இதை வைத்து ஒரு விவாதத்தை கிளப்பி விட வேண்டாம்!), கம்யூனிஸ்ட்டும் கம்யூனிஸமும் ஒழியனும் / ஒழிக்கனும் என அறைகூவல் விடுத்து கொண்டு அதை செயலிலும் செய்து கொன்டிருந்த ஹிட்லர் உடன் உடன்படிக்கை என்பது வடிக்கட்டிய அயோக்கியத்தனம். ஸ்டாலின் செய்தா இந்த தவறுக்கு எத்தனை மனிதர்கள்(கம்யூனிஸ்ட்டுகள் உட்பட) பலியிடப்ப்ட்டார்கள் தெரியுமா?
        பின்னாட்க்களில் ஒன்றியம் (சோவியத்து) ஒரு சமூக ஏகாதிபத்தியமாய் திரிந்து போனதர்க்கு முழு காரணமும் ஸ்டாலின் தான். இயந்திரமயமாக்கல், இரானுவமயமாக்கல் என மக்களிடம் இருந்து அரசை பிரித்தெடுத்து அந்த தவற்றை துவக்கி வைத்தவர் அவர். ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட், மார்க்ஸ் > லெனின் > மாவோ என்று தான் தன் பாதையை வகுத்து கொள்ள வேண்டுமே தவிர, மனித குல விரோதி ஸ்டாலினை முன் வைத்து அல்ல.”
        ஸ்டாலின் காலத்திய சோவியத்து அரசுக்கும் மக்களுக்குமான உறவு அந்நியமானது ஏன் எனும் கேள்விகளுடன் நமது பரிசீலனைகள் தொடர்ந்தால் மட்டுமே சோஷலிஸ கட்டுமாணத்தின் பிரச்சனைகள் புரிபட துவங்கும். ஸ்டாலினை பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றை பிரதிநிதியாய் அல்லது ஹீரோவாய் பார்க்காமல் குறைகளும் உள்ள ஒரு கம்யூனிஸ்ட் என பார்க்கும் பொழுது தான் மக்களின் அதிகாரம், அரசுக்கு கைமாறிய அவலம் புரியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு, ஏகாதிபத்திய அரசுகளின் சாயலில் கட்டியமைக்கபட்ட வரலாறு துலங்கும்.

        மாற்று கருத்து கொண்டவர்களையும் மாற்று இயக்கதாரையும் அழித்தொழிக்கும் புலிகளின் செயல் அராஜகம் என்றால் (அராஜகம் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை) கம்யூனிஸ்ட்டுகளின் செயல்களை எப்படி நியாய படுத்துவது? நியாமாய் ஒரு கம்யூனிஸ்ட் அப்படி மாற்று கருத்து உள்ளவர்களை தனது நேர்மைத்திறனால் வென்றெடுக்க வேண்டுமே தவிர இப்படி அழித்தொழித்து அல்ல என்பதை ஒப்பு கொள்வோமாயின், ஸ்டாலின் கம்யூனிச பாதையில் ஒரு இடர் என்பதை ஒப்பு கொள்வோம்.

        சோஷலிஸ கட்டுமாணத்தை (கட்டுமாணத்தை மட்டுமே) அவர் வெற்றிகரமாய் நிறுவியதை வைத்து அவரை புகழ்வதை தவிர்த்து அதன் அடித்தளங்கள் செம்மையில்லாமல் போனதை (பில்டிங் ஸ்டார்ங் பேஸ்மன்ட் வீக்) கண்டு கொள்ள விழைகிறேன். மேலும் அதை கட்டியமைக்க அவர் கையாண்ட முறைகளும் அழமான பரிசிலனைக்கு உரியன. இந்த வரலாற்றை சரியாக அவதானிக்கவில்லை என்றால் நாம் மீன்டும் மீன்டும் அதே தவற்றை செய்து கொண்டிருப்போம். ஒப்பீட்டளவில் மாவோவின் பங்களிப்பான சீணாவின் சோஷலிச கட்டுமாணம் கொஞ்சம் அதிக பலம் வாய்ந்து இருப்பதால்த்தான், ஏகாதிபத்திய அரசுகள் சோவியத்தை ஒரே நாளில் தகர்த்து எறிந்தது போல் (ஹும்… நீண்ட கால முயற்ச்சிக்கு பின் என்றாலும்) சீணாவை தகர்க்க முடியாமல் பின் வாசல் வழியே நுழைந்து முயற்ச்சித்து கொண்டிருக்கிறது.(விவாதத்துக்கு உரியது நான் மேலும் புரிந்து கொள்ள முயல்கிறேன்) இங்கு சிலர் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் போல் வந்து ஸ்டாலின் புகழ் பாடுவதை பார்க்கும் போது…ஷப்பா இப்பவே கண்ணை கட்டுதே…

  9. தோழர் ஸ்டாலின் பற்றிய அவதூறுகளையெல்லாம் பொய் என்று தோலுறித்துக்காட்டியவர்கள் யாரும் ரஷ்யர்களோ, கம்யூனிஸ்டுகளோ இல்லை. கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டிலும் ‘தி நேசன்’ என்ற அமெரிக்க பத்திரிக்கையின் நிரூபர் லூதிஸ் பிஷ‌ரும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்பது ஒன்றே போதும் தோழரின் மீது எழுப்பப்பட்டவை அனைத்தும் அக்மார்க் கட்டுக்கதைகள் என்பதற்கு.

    தோழமையுடன்
    செங்கொடி

  10. காரல்மார்க்ஸ்

    ஸ்டாலின் பற்றிய உங்கள் பதிவு அருமை

    தொடருங்கள்

  11. “எனினும் ஹிட்லரின் பாசிச வெறிக்கு முடிவு கட்டியது தோழர் ஸ்டாலின் தலைமையிலான செம்படை என்பதை யாரும் மறுக்கமுடியாத உண்மை.
    நீங்கள் மறுக்கிறீர்களா? ”

    இந்த மேட்டரை மறுக்க முடியாது.

    நீங்கள் சொன்ன புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன். ஆனால், பொதுவான கருத்திற்கும் கம்யூனிஸ்ட் தொண்டருக்கும் உள்ள கருத்திற்கும் நீங்கள் தான் வித்யாசம் காண வேண்டும். அவ்வளவு வரலாற்று செய்தியுடன் சொல்லி இருக்கிற விக்கிபீடியா நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்க சற்று கடினமாகவே உள்ளது. இருப்பினும் நீங்க கூறிய நூல்களில் படிக்கிறேன்.

    பிடல் கேஸ்ட்ரோவைப் பற்றி இன்னும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கும் சி ஐ ஏவின் பல பொய்க் கதைகளை நம்பாதவர்கள் நாங்கள். அதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயமும் தொண்டர்களாகிய தங்களுக்கு உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    • சர்வதேசியவாதிகள்

      அவ்வளவு வரலாற்று செய்தியுடன் சொல்லி இருக்கிற விக்கிபீடியா நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்க சற்று கடினமாகவே உள்ளது. இருப்பினும் நீங்க கூறிய நூல்களில் படிக்கிறேன்//

      நாம் கூறிய புத்தகங்கள் மற்றும் நம் அடுத்தடுத்த பதிவுகளின் வரலாற்று ஆதாரங்கள் தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை உங்களுக்கு நன்கு விவரிக்கும் என்று நம்புகிறோம். பிறகு நீங்களே விக்கிபீடியாவில் உள்ளது எது சரி எது அவதூறு என்பதை புரிந்து கொள்வீர்கள். இதை தெளிவுபடுத்துவது என்பது நமது கடமை என்பதை உணர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் அவதூறுகளை அம்பலமாக்குவோம்.

  12. சித்தார்த்த‌ன்

    நல்ல பதிவு,
    ஸ்டாலின் மீதான அவதூறுகளின் அனைத்து வகைகளையும் திரை விலக்கி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  13. ஒரு வேளை ஸ்டாலின் உயிரோடு இருந்திருந்தால் இன்னுமாட இந்த உலகம் என்ன நம்பிட்டு இருக்கு என்று ரொம்ப பீல் பன்னிருபார்.. கொடுங்கோல் ஆட்சிக்கு கொடி பிடிக்கும் கூட்டம் தான் இன்றைய கம்யூனிச கூட்டம்..

    • முதலாளித்துவ அவதூறுகளையே பேசாதீர்கள்.
      சர்வதேசவாதி தனது பதிவிலேயே சொல்லியிருக்கிறார், தோழர் ஸ்டாலின் பற்றிய நூல்களில் பத்துக்கு ஒன்பது பொய் என்று, எனவே அவற்றையெல்லாம் படித்து விட்டு உளறாதீர்கள். ஸ்டாலின் பற்றி நீங்கள் கூறுகிறவற்றுக்கு என்ன ஆதாரம் என்பதையும் அதை எங்கு படித்தீர்கள் என்பதையும் முதலில் முன் வையுங்கள். எந்த புத்தகத்தை படித்துவிட்டு இப்படி பேசுகிறீர்கள் என்பது அப்போது தெரியும்.

    • ராபர்ட் சர்வீஸ் என்பவர் கம்யூனிசம் பற்றி எழுதிய பல புத்தகங்களை படித்து தான் இப்படி கூறுகிறேன் .. நான் நீங்கள் கூறிய அந்த பதில் ஒன்பதை மட்டும் நான் படிக்கச் வில்லை.. அனால் அந்த ஒன்றில் உள்ள கர்துகள் எவளோ வேறுபடுகின்றன என்று உணர்கிறேன்.. அப்படி அந்த ஒன்பதும் பொய்யாக இருந்திருந்தால் கோபர்சேவ் போன்றோர் ஸ்டாலினிசத்தை அழிக்க முயற்சிகளின் எடுத்த பொது ஏன் அந்த நாட்டில் பெருத்த எதிர்ப்புகள் வரவில்லை? வெறும் முதளித்துவ அடிமைகளின் புத்தகங்களை மட்டும் நான் படிகிறேன் என்று நீங்க குத்தம் சொனால் அதே குற்றத்தை நானும் உங்கள் மேல் சுமத்தலாம் வெறும் கம்யூனிச ஆதரவாளர்களின் புத்தகங்களை மட்டும் நீங்க படிகிறீர்கள் என்று..

  14. //

    ஹிட்லரும் ஸ்டாலினும் சேர்ந்து போட்ட ஒப்பந்தம் என்பது செயல் தந்திரத்தின் அடிப்படையில் போட்டது. ஒப்பந்தமே போடக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. உலகச் சூழலில் அமெரிக்கா இங்கிலாந்து ஏகாதிபத்தியங்களுக்கு நடுவிலும், ஹிட்லரின் ஜெர்மனி பாசிச நெருக்கடிக்கு இடையிலும் மாட்டிக்கொண்ட ரஷ்யாவை இந்த ஒப்பந்தம் என்னும் செயல் தந்திரத்தின் மூலம் ரஷ்யாவை நெருக்கடியிலிருந்து காக்கும் அடிப்படையில் போடப்பட்டது. எனினும் ஹிட்லரின் பாசிச வெறிக்கு முடிவு கட்டியது தோழர் ஸ்டாலின் தலைமையிலான செம்படை என்பதை யாரும் மறுக்கமுடியாத உண்மை.

    நீங்கள் மறுக்கிறீர்களா?

    //

    நான் மறுக்கிறேன்..

    ஹிட்லர் ஒரு வேளை ரஷ்யாவின் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ஸ்டாலின் ஹிட்லரின் ஆட்சியை அளிக்க போரிட்டு இருபாரா? இருப்பார் என்று நீங்க சொன்னால் உங்களை போல் உண்மை அறியாத முட்டாள் வேறு யாரும் இல்லை.. ஹிட்லேரும் ஸ்டாலினும் போலந்தை பங்கிட்டு கொண்டனர்.. ஹிட்லர் ஒரு வேளை இரண்டாம் உலக போரில் வென்றிருந்தால் ஹிட்லேரும் ஸ்டாலினும் அமெரிக்க ஏகபதியத்தை சேர்ந்து ஒழித்தார்கள் என்று நீங்க இன்று எழுதியிருப்பீர்கள்..

  15. //

    நாங்கள் ஸ்டாலினை தான் விமர்சிக்கிறார்கள் மற்றபடி கம்யூனிசத்தை ஏற்கிறோம் என்று யாரும் சொல்வதில்லை. ஸ்டாலினை அவதூறு செய்கிற அனைவரும் கம்யூனிசத்தையும் கட்டோடு வெறுக்கிறார்கள்

    //

    அதை எப்படி சார் நீங்களா முடிவு செய்ஞ்சீங்க? எனக்கு கூட தான் ஸ்டாலின புடிக்காது. ஆனா பொது உடைமை கொள்கைல உடன்பாடு உண்டு..
    சரி அதெலாம் இருகட்டும்!!

    ஸ்டாலின் ஆட்சியில் இருந்தது மர்க்ஸிய ஆட்சியா? எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…

    வாதத்தை அதுகப்புறம் ஆரம்பிப்போம்

  16. ஸ்டாலின் பற்றிய‌ பொய்களையும் அவதூறுகளையும் அம்பலமாக்கும் கட்டுரைகள்.

    http://socratesjr2007.blogspot.com/2009/03/blog-post.html

    http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4246:1&catid=67:2008&month=11&year=2008

    http://kedayam.blogspot.com/2007/04/blog-post_09.html

  17. நாங்கள் கம்யூனிச ஆதரவாளர்களின் புத்தகங்களை படிக்கவில்லை, அது போன்ற புத்தகங்களை எழுதிய யாரும் கம்யூனிச ஆதரவாளர்களும் அல்ல, அவர்கள் முதலாளிய ஜனநாயகவாதிகள் அவ்வளவே.

    மக்களிடம் எதிர்ப்பு இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள், எதிர்ப்பு இருந்தது அவை மிரட்டி அடக்கப்பட்டன. குருச்சேவின் திரிபுவாதத்திற்கு எதிராக மக்கள் போராடினார்கள் ஆனால் அவை ஒடுக்கப்பட்டன,ஆனால் அது அளவில் குறைவாக இருந்தது.

    ஸ்டாலின் சிலைகளை மட்டுமல்ல, லெனின் சிலைகளையும் கூட தான் திரிபுவாதிகள் உடைத்தார்கள், அப்போதும் மக்கள் எதிர்க்கத்தான் செய்தார்கள் அதுவும் அளவில் குறைவாக தான் இருந்தது எனவே லெனின் சர்வாதிகாரி என்று சொல்ல முடியுமா ?

    • லெனின் சிலைகள் உடைக்க பட்டனவா? இது நான் கேள்வி படாத ஒன்று.. எந்த புத்தகத்தில் அப்படி படித்தீர்கள் என்று கூறினால் நானும் படிபேன்..

      லெனின் கூறிய மார்க்ஸ்ய வழியை பின்பற்றாதது நாலே தான் திருப்புவாதிகள் ஸ்டாலின் மீது பழி சுமத்தினர்.. நீங்க கூறுவது போல் அல்ல.. லேன்னிசிம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்தார்கள் திருப்புவாதிகள்

  18. போடா புண்ணாக்கு,
    ஸ்டாலின் பத்தியா தப்பா பேசுற பல்லு பேந்துரும்.
    நாங்கெல்லாம் ரவுடிடா மாப்ள‌

    • சர்வதேசியவாதிகள்

      அனைவரின் கவனத்திற்கு,
      நமது தோழர்கள் இந்த மாதிரி அநாகரீகமாக பேச மாட்டார்கள்.அதனால் இவர் இவ்வாறு பேசுவது இவர் மீது சந்தேகத்தை வரவழைக்கிறது.

      கம்யூனிச எதிர்ப்பாளர்கள் இம்மாதிரி போலி பெயர்களில் வந்து நமக்கு ஆதரவாக பேசுவது போல் பேசி நம்மை இழிவு படுத்தவே வருவார்கள்.

  19. சர்வதேசியவாதிகள்

    இங்கு ’நிழல்’ என்பவர், தான் கம்யூனிச கொள்கையை ஆதரிப்பதாகவும், ஆனால் தோழர் ஸ்டாலினை பிடிக்காது என்றும் சொல்லியிருக்கிறார்.

    அவரிடம் நாம் வைப்பது சில கேள்விகள் மட்டுமே,

    1. பொதுவுடைமை கொள்கையை எந்த அம்சத்தின் அல்லது கூறுகளின் அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்?

    2. பொதுவுடமையை ஆதரிக்கும் நீங்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஆதரிப்பதாகவே நம்புகிறோம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஆதரிக்காத கம்யூனிஸ்டு என்று ஒரு முட்டாளால் கூட சொல்லிக்கொள்ளமுடியாத பட்சத்தில் நீங்கள் அவ்வாறு கூற மாட்டீர்கள் என்றே நம்புகிறோம். “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லது கம்யூனிச தத்துவத்திற்கு முரணாக தோழர் ஸ்டாலின் செயல்கள் இருந்ததால் ஸ்டாலின் எனக்கு பிடிக்காது” என்று நீங்கள் சொன்னால் அவர் செய்த தவறுகள் மற்றும் கம்யூனிச முரண்களை ஆதாரங்களுடன் கூறவும்.

    3.தோழர் ஸ்டாலினை தவிர்த்த எந்த கம்யூனிச கொள்கையை / கட்சியை ஆதரிக்கிறீர்கள்?

    கம்யூனிச ஆதரவாளரான தோழர் நிழல் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

    //வெறும் முதளித்துவ அடிமைகளின் புத்தகங்களை மட்டும் நான் படிகிறேன் என்று நீங்க குத்தம் சொனால் அதே குற்றத்தை நானும் உங்கள் மேல் சுமத்தலாம் வெறும் கம்யூனிச ஆதரவாளர்களின் புத்தகங்களை மட்டும் நீங்க படிகிறீர்கள் என்று..//

    நாம் ஏற்கனவே கூறிவிட்டோம்.
    ‘ஸ்டாலின் சகாப்தம்’ என்னும் நூல் அன்னா லூயிஸ்ட்ராங் என்னும் இங்கிலாந்து பத்திரிக்கையாளரால் எழுதப்பட்டது. ‘மாபெரும் சதி’ என்னும் நூல் இரு அமெரிக்கர்களால் எழுதப்பட்ட்து. இவர்கள் ஜனநாயகவாதிகள்.

    • பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? பாட்டாளிகளின் என்று ஒருவன் வந்து அவர்கள் மீது ஆட்சி செலுத்துவதா ?? இதற்கு ஆமாம் என்பது உங்கள் பதில் என்றால் மனிக்கவும் நீங்கள் “பாட்டாளிகள் சர்வாதிகாரத்தை ” தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று தான் நான் கூற வேண்டும்..

      பாட்டாளிகள் சர்வதிகாரம் யாதெனில் பாடளிகலே தங்கள் தொழிலை முதலாளிகள் இல்லாமல் தாங்களே லாபம் நஷ்டம் என்ற கணக்கு பார்க்காமல் அனைவர்க்கும் அனைத்தும் கிடைகிறதா என்பதை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு சமுதாயம் உளைகுமே அனால் அது மட்டுமே பாட்டாளி வர்க்க சார்வாதிகாரம் ஆகும்.. ஸ்டாலின் ஆட்சியில் எந்த துறையை சேர்ந்த பாட்டாளிகள் தங்கள் தொழிலை தாங்களே நிர்வாகம் செய்யும் சுய நிர்ணய உரிமையை பெற்றிருந்தார்கள்? கண்டிப்பாக அவர்கள் விவசயாதில் சுய நிர்ணய உரிமை பெறவில்லை என்பது ஊரறிந்த உண்மை.. வேறு எதாவது துறையில் பெற்றிருந்தார்கள் என்றால் நீங்க கூறவும்..

      “அதெல்லாம் கிடையாது. ஸ்டாலின் ஆட்சியிலும் தனி முதலாளிகள் என்று யாரும் இல்லையே .. அப்படி என்றால் அது பாட்டாளி சர்வாதிகாரம் தானே ” என்று சில கம்யூனிஸ்டுகள் வாதாடுவது உண்டு. அப்படி நீங்களும் வாதாடுவீர்களே அனால் உங்களுக்கான பதில் இதோ.. ஸ்டாலின் ஆட்சி முறைக்கு பெயர் “ஸ்டேட் காபிடலிசம் “.. சொவியட் என்னும் நாடு அமைப்பு அதன் மக்களை அதன் நலத்திற்காக உழைக்க சொல்லி லாபம் ஈட்டியது.. இது தான் கம்யூனிச கொள்கையா?

      //

      பொதுவுடைமை கொள்கையை எந்த அம்சத்தின் அல்லது கூறுகளின் அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்?

      //

      இதற்கு ஒரு வரியில் பதில் கூறிவிட முடியும் என்று நீங்கள் நினைகிறீர்களா?

      //

      தோழர் ஸ்டாலினை தவிர்த்த எந்த கம்யூனிச கொள்கையை / கட்சியை ஆதரிக்கிறீர்கள்?

      //

      இன்று இருக்கும் எந்த ஒரு கம்யூனிச அமைப்பின் மீதும் எனக்கு பிடிப்பு கிடையாது

    • பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? பாட்டாளிகளின் தலைவன் என்று ஒருவன் வந்து அவர்கள் மீது ஆட்சி செலுத்துவதா ?? இதற்கு ஆமாம் என்பது உங்கள் பதில் என்றால் மனிக்கவும் நீங்கள் “பாட்டாளிகள் சர்வாதிகாரத்தை ” தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று தான் நான் கூற வேண்டும்..

      பாட்டாளிகள் சர்வதிகாரம் யாதெனில் பாட்டாளிகளே தங்கள் தொழிலை முதலாளிகள் இல்லாமல் தாங்களே லாபம் நஷ்டம் என்ற கணக்கு பார்க்காமல் அனைவர்க்கும் அனைத்தும் கிடைகிறதா என்பதை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு சமுதாயம் உழைக்குமே அனால் அது மட்டுமே பாட்டாளி வர்க்க சார்வாதிகாரம் ஆகும்.. ஸ்டாலின் ஆட்சியில் எந்த துறையை சேர்ந்த பாட்டாளிகள் தங்கள் தொழிலை தாங்களே நிர்வாகம் செய்யும் சுய நிர்ணய உரிமையை பெற்றிருந்தார்கள்? கண்டிப்பாக அவர்கள் விவசயாதில் சுய நிர்ணய உரிமை பெறவில்லை என்பது ஊரறிந்த உண்மை.. வேறு எதாவது துறையில் பெற்றிருந்தார்கள் என்றால் நீங்க கூறவும்..

      “அதெல்லாம் கிடையாது. ஸ்டாலின் ஆட்சியிலும் தனி முதலாளிகள் என்று யாரும் இல்லையே .. அப்படி என்றால் அது பாட்டாளி சர்வாதிகாரம் தானே ” என்று சில கம்யூனிஸ்டுகள் வாதாடுவது உண்டு. அப்படி நீங்களும் வாதாடுவீர்களே அனால் உங்களுக்கான பதில் இதோ.. ஸ்டாலின் ஆட்சி முறைக்கு பெயர் “ஸ்டேட் காபிடலிசம் “.. சொவியட் என்னும் நாடு அமைப்பு அதன் மக்களை அதன் நலத்திற்காக உழைக்க சொல்லி லாபம் ஈட்டியது.. இது தான் கம்யூனிச கொள்கையா?

      //

      பொதுவுடைமை கொள்கையை எந்த அம்சத்தின் அல்லது கூறுகளின் அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்?

      //

      இதற்கு ஒரு வரியில் பதில் கூறிவிட முடியும் என்று நீங்கள் நினைகிறீர்களா?

      //

      தோழர் ஸ்டாலினை தவிர்த்த எந்த கம்யூனிச கொள்கையை / கட்சியை ஆதரிக்கிறீர்கள்?

      //

      இன்று இருக்கும் எந்த ஒரு கம்யூனிச அமைப்பின் மீதும் எனக்கு பிடிப்பு கிடையாது

  20. தோழர் சர்வதேசவாதி கேட்டது போல, நீங்கள் கம்யூனிசத்தை ஏற்கிறீர்கள் என்றால் அதை எப்படி ஏற்கிறீர்கள் என்று சற்று விளக்கினால் நன்றாக இருக்கும். விலக்குகிறீர்களா ?

    நீங்கள் சொல்லும்படியான கம்யூனிசம் என்பது எது என்பதையும் எந்த நாட்டில் அவ்வாறான கம்யூனிச அமைப்பு இருந்தது என்பதையு சேர்த்து விளக்குங்கள்.

    • மார்க்சியத்தின் பெயரை சொல்லிக்கொண்டு சிலர் ஆட்சி செய்தாலும் மார்க்சிய வழியில் ஆட்சி செய்ய வில்லை என்பது தான் என் வாதமே.. ஆகையால் மார்க்சியம் என்றும் புத்தகத்தில் தான் இருந்ததே தவிர நடை முறை படுத்த படவே இல்லை

  21. சர்வதேசியவாதிகள்

    //பொதுவுடைமை கொள்கையை எந்த அம்சத்தின் அல்லது கூறுகளின் அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? //
    இதற்கு ஒரு வரியில் பதில் கூறிவிட முடியும் என்று நீங்கள் நினைகிறீர்களா?
    ————-

    நீங்கள் ஒருவரியில் தான் இதைப்பற்றி கூறவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லையே.
    எத்தனை வரிகளில் வேண்டுமானாலும் கூறுங்கள். நாங்கள் படிக்க தயாராக இருக்கிறோம்.

    //இன்று இருக்கும் எந்த ஒரு கம்யூனிச அமைப்பின் மீதும் எனக்கு பிடிப்பு கிடையாது//

    இந்தியாவிலோ அல்லது தமிழ் நாட்டிலோ உங்களுக்கு பிடிப்பு ஏற்படும்படியான கம்யூனிச அமைப்புகள் எதுவுமே இல்லையா? இப்படியொரு கம்யூனிஸ்டை இப்போது தான் கேள்விபடுகிறோம். எந்த ஒரு அமைப்பும் பிடிக்காத நேரத்தில் நீங்களே உங்களுக்கு சரியெனப்பட்ட விதத்தில் ஒரு கம்யூனிச அமைப்பை தோற்றுவித்தால் என்ன?

    //மார்க்சியத்தின் பெயரை சொல்லிக்கொண்டு சிலர் ஆட்சி செய்தாலும் மார்க்சிய வழியில் ஆட்சி செய்யவில்லை என்பது தான் என் வாதமே.. ஆகையால் மார்க்சியம் என்றும் புத்தகத்தில் தான் இருந்ததே தவிர நடை முறை படுத்த படவே இல்லை.//

    இப்போது புரிகிறது. உங்களுக்கு இங்கிருக்கும் எந்த கம்யூனிச அமைப்பின் மீதும் பிடிப்பு ஏற்படாமல் போன காரணம். நீங்கள் உலக அரங்கிலேயே எந்த கம்யூனிச அமைப்பையும் ஆதரிக்காதவர். இங்கிருப்பவர்களையா ஆதரிக்க போகிறீர்கள். சரி உலகத்திலேயே எந்த கம்யூனிச அமைப்பும் மார்க்சிய தத்துவத்தை நடைமுறைபடுத்தவே இல்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? மார்க்சிய வழியில் ஆட்சி என்றால் எவ்வாறு?

    • //

      இந்தியாவிலோ அல்லது தமிழ் நாட்டிலோ உங்களுக்கு பிடிப்பு ஏற்படும்படியான கம்யூனிச அமைப்புகள் எதுவுமே இல்லையா? இப்படியொரு கம்யூனிஸ்டை இப்போது தான் கேள்விபடுகிறோம். எந்த ஒரு அமைப்பும் பிடிக்காத நேரத்தில் நீங்களே உங்களுக்கு சரியெனப்பட்ட விதத்தில் ஒரு கம்யூனிச அமைப்பை தோற்றுவித்தால் என்ன?

      //

      கண்டிப்பாக.. எனக்கு என்று நேரம் வரும் பொழுது நான் கண்டிப்பாக ஆரம்பிபேன்.. தற்போது இல்லையே தவிரா நா ஆரம்பிக்கவே போறதில்லை சும்மா வாதாடிடே தான் இருபேன் என்று எங்குமே சொல்லவே இல்லையே.. ம.க.இ.க வில் நீங்க பிறந்திதிலே இருந்தே உருபினரா? இல்லை தானே? அது போல் தான்..

      “ஹா ஹா ஹா ஹா இவன பாரு டா கட்சி ஆரம்பிக்க போரானாமுல்ல” என்று உங்கள் மத்தியில் கேலி செய்து சிரிக்கவும் ஆள் இருக்கும் என்று எனக்கு தெரியும்..

      //

      சரி உலகத்திலேயே எந்த கம்யூனிச அமைப்பும் மார்க்சிய தத்துவத்தை நடைமுறைபடுத்தவே இல்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? மார்க்சிய வழியில் ஆட்சி என்றால் எவ்வாறு?

      //

      இதற்கான பதிலை நான் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்பதற்கான என்னுடைய விளக்கதிலேயே கூறிவிட்டேன்.. மறுபடியும் கூற வேண்டுமா?

  22. வெங்காயம்

    தோழர், நிழல் ஒரு காமெடி பேர்வழி. இவருக்கு கம்யூனிச தத்துவத்தின் மீதே நம்பிகை கிடையாது. நீங்க கேட்டுடீங்களேன்னு ஏதேதோ சும்மான்னா உளறாரு. மார்க்ஸ் மட்டும் தான் பிடிக்கும் வேற யாருமே பிடிகாதுன்னு சொல்ற முதல் கம்யூனிஸ்டு இவராகத்தான் இருப்பார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வர்க்கம், இயக்கவியல் பொருள்முதல் வாதம்னு எனக்கும் தெரியும்னு காட்டி உதார் உட்ற பார்டியில் நம்ம நிழலும் ஒருத்தர்.

    நிழல் – நீங்க சரியான காமெடி பீசு ஓய்..
    சர்வதேசியவாதிகள் கேட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் சொல்லும் ஓய்..

  23. ஜூலிஸ் ஃபூசிக்

    //பொதுவுடைமை கொள்கையை எந்த அம்சத்தின் அல்லது கூறுகளின் அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? //

    சர்வதேசியவாதிகள் ஏற்கனவே கேட்ட இக்கேள்விக்கு பதில் காணோமே.

    ஒரு வரி இரு வரி என்று சமாளிக்காதீர்கள்.

    • வெங்காயம்

      தோழர் ஃபூசிக், அவர் ஜனநாயகவாதி போல் ஆரம்பத்தில நடிச்சாரு. தோழர் ஸ்டாலின் பத்தி நான் படிச்சது இதுதான். நீங்க ஏதாவது புத்தகம் இருந்தா குடுங்க. நான் படிக்கிறேன்னாரு.
      அதுலேயே தெரிது அவர் அரைவேக்காட்டுத் தனமாக மார்க்சியம் தெரிஞ்சி பேசுராருன்னு.
      இப்ப யாருமே பிடிக்கலங்றாரு. சர்வதேசியவாதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் உளறாரு. யாருமே பிடிகலைனா அவர் ராபர்ட் சர்வீஸை மட்டும் ஏத்துகிட்டு எப்படி அதை சரின்னு ஏத்துகிறாரு.

      அவர் உதார் உட்ற பார்டி.

      • என்னையா உளரே? ராபர்ட் சர்வீஸ் கம்யூனிசம் பற்றி எழுதிய புத்தகங்களை படித்திருகிறேன் என்று கூறினேன்… கம்யூனிச தலைவர்கள் மாறிக்ஸ்யா வழியை ஒழுங்காக புரிந்து கொண்டு போராடவில்லை..மாற்க்ஸ்யா வழியில் நடக்க வில்லை என்று கூறினேன்.. சமந்தமே இல்லாமல் ரெண்டுக்கும் முடிச்சு போடா பகுரியே .. ராபர்ட் சர்வீஸ் யாரு என்று தெரியுமா? பொய் தேடி பாரு முதல.

    • அண்ணே ஃபூசிக்.. நீங்களும் நானும் பல முறை இந்தே தளத்துல வாதடிருகொம்.. ஆனா நீங்க பாதிலயே எஸ்கேப் ஆயடிங்க.. நானா? எஸ்கேபா? என்று நீங்க வியாந்தால் தயவு செய்து முன்னால் பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளை மீண்டுமொரு முறை வாசிக்கவும்

    • ஜூலிஸ் பூசிக் சொல்வது உண்மை அதை நானும் ஆதரிக்கிறேன்.

  24. ஹ்ம்ம் .. இது தான் இன்றைய கம்யுநிஸ்டுகளின் நிலைமை… எவனாவது எதாவது எதிர்த்து பேசினால் உடனே உதார் விடுகிறான் இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு விமர்சனத்தை ஏற்காத ஒரு கூடமாகவே இருக்கிறது..

    இப்படி ஒரு அறைவேக்காடான விமர்சனத்தை எழுதி விட்டு தன்னை தானே ஒரு காமெடி பீஸ் என்று நிருபித்து கொண்டு இருக்கிறார் இந்த “வெங்காயம்” … “மாப்ள செம கமெண்ட் டா.. கலக்கிடே ” என்று உங்களை சுற்றி உங்களை ஏற்றி விட பல பக்கடாகள் இருப்பார்கள் என்பதை உணர்கிறேன்…

  25. நிழல்,
    தோழர்கள் கேட்டுள்ள பல்வேறு கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளிக்காமல் நழுவுகிறீர்கள்.

    நீங்கள் மார்க்சியம் என்று நம்புவது எதை?
    தோழர் ஸ்டாலினை நீங்கள் எந்த அடிப்படையில் ஆதரிக்கிறீர்கள் எதிர்க்கிறீர்கள் ?
    ம.க.இ.க பற்றிய உங்கள் பார்வை என்ன ?

    இதற்காவது பதில் சொல்லுங்கள்.

    • //
      நீங்கள் மார்க்சியம் என்று நம்புவது எதை?
      தோழர் ஸ்டாலினை நீங்கள் எந்த அடிப்படையில் ஆதரிக்கிறீர்கள் எதிர்க்கிறீர்கள் ?
      //

      இதற்கான பதிலை தானே நான் இவளோ நேரம் மேல கூறியிருந்தேன் .. திருப்பியும் சொல்லனுமா? நான் மார்க்ஸியத்தை நம்புகிறேன்.. அனால் எனக்கு ஸ்டாலினிசம் மீது துளி அளவும் பிடிப்பு கிடையாது .. உங்கள் பார்வையில் ஸ்டாலினிசம் மர்க்ஸ்யசமாக தெரிகிறது… எனக்கு அப்படி இல்லை..

      //
      ம.க.இ.க பற்றிய உங்கள் பார்வை என்ன ?
      //

      இந்தியாவின் தேவையை உணராமல் இருக்கிறது ம.க.இ.க .. இது தான் என் எண்ணம்

  26. எல்லா கம்ம்யூனிஸ்டு நாய்களும் அவிங்களுக்குள்ளேயே அடிச்சுகிட்டு செத்துத் தொலைங்கடே…
    இந்தியாவுக்கு அப்பத்தான் நல்ல காலம் பொறக்கும்.

    “ஏழ்மை எனது பிறப்புறிமை, அதை நீ அடைந்தே தீருவாய்” என்பது தான் உங்கள் உயிர் மூச்சாக இருக்கிறது. எப்படி அடுத்தவனை ஏழையாக்கி அதில் கம்யூனிஸம் பரப்பலாம் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கிறது. ஆகவே நீங்கள் உயிருடன் இருக்கவே லாயக்கு அற்றவர்கள்.

    • 1.நீ முதலாளி கூட்டத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும்
      2.தன உழைப்பை முதலாளி உருஞ்சிகிறான் என்று தெரியாத ஒரு முட்டாள்
      3.மன நலம் குன்றியவன்

      இத மூன்றில் ஒருவனாக தான் நீ இருக்க வேண்டும்

      வாழ்க வளமுடன்

      • எதாவது ஒரு கம்யூனிஸ நாட்டில் உள்ள ஜனநாயக உரிமையைப் பற்றி எழுதுவே…
        யார் முட்டாள், மன நலம் குன்றியவன், யார் ரத்தம் உரிஞ்சும் அட்டைப்பூச்சிகள் என்று தெரிந்துவிடும். கியூபா, வட கொரியா, சீனா, வெனிசூலா…?!

        கம்யூனிஸம் சோசியலிசம் என்பது மக்களை முட்டாளாக்கி அவர்கள் ரத்தத்தை உரிஞ்சவே எழுதப்பட்ட கோட்பாடுகள். அதை கடைபிடித்துக் கண்டுபிட்த்தவர்கள் ரஷியர்கள். அதைப் பார்த்துத் திருந்தியவர்கள் மற்ற பல நாட்டவர்கள். ஹிட்லரின் கட்சியின் பெயர் என்ன தெரியுமா ? national socialist party. Nationalsozialistische Deutsche Arbeiterpartei. பாசிஸ்டுகள், சோசியலிஸ்டுகள் எல்லாம் முதலில் கம்யூனிஸ்டுகளாக இருந்து பின்னர் பிரிந்தவர்கள். அவர்கள் அடிப்படை கம்யூனிஸத்தில் தான் உள்ளது.

        இன்னும் அது தான் உலகின் தலைசிறந்த கொள்கை என்பவர்கள் மதிகெட்ட முழு மூடர்கள்.

        ஜாதிகளை உருவாக்கியது எப்படி பார்ப்பானர்கள் தானோ அதே போல் நாஜிக்களையும், பாசிஸ்டுகளையும், சர்வாதிகாரிகளையும் உருவாக்கியது கம்யூனிசம்.

        ஜாதிகள் ஒழிய பார்ப்பானர்கள் ஒழியவேண்டும் என்றால், பாசிசம், நாஜிசம் ஒழிய கம்யூனிசம் ஒழிக்கப்பட வேண்டும்.

        நீங்கள் எல்லாம் திருந்தும் நாள், அல்லது திருந்தாமல் இருந்தால் உயிருடன் கொழுத்தப்படும் நாள் தான் தமிழகத்திற்கு தீபாவளி.

        • வரலாறும் தெரியாது.. கம்யூநிசமும் தெரியாது.. அப்புறம் ஏன் ராசா இங்க வந்து உளறி கிட்டு இருக்கே..

          • commie.basher

            நிழலு,
            நீங்க சொல்லும் வரலாறு எல்லாம் நிச்சயம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தது உண்மை வரலாறு, பிரச்சார வரலாறு அல்ல.

            ஆனா, கம்யூனிசம் மட்டும் மிக நன்றாகத் தெரியும். மனித குலத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் கொள்கை கம்யூனிசம். “நரகத்திற்கான பாதையே நல்லெண்ணத்தினால் தான் உருவாக்குகிறார்கள்” என்பார்கள், அத்தகயை நல்லெண்ணம் தான் கம்யூனிசம்.

    • அட மத‌வெறி பிடித்த இஸ்லாமிய மதவெறியனே, 1500 வருசமா இப்படியே முட்டாளாகவே இருக்கீங்களேடா எப்பத்தான்டா திருந்துவீங்க. மதவெறி தலைக்கு ஏற்ப்போய் அடுத்தவ்னஓ விவாதம் பன்னி என்னொட மதம் தான் யோக்கியமான மதம்ன்னு சொல்றதே உங்களுக்கு வேலையாப்போச்சுடா. இன்னும் நீங்க திருந்தாம அல்லா குல்லான்னா அப்படியே எங்கையாவது நல்ல அடர்ந்த‌ காடா பார்த்து குடியேறிடுங்கடா.

      பொண்களை முழுக்க முக்காடு போட்டு கொடுமை படுத்துறீங்க ஆனா நீங்க மட்டும் நாலு பொம்பளைங்களை கல்யாணம் பண்ணிக்கிறீங்க இது தான் நல்ல மதமா ? போங்கடா போய் மதவெறியை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு மணுசன மாறுங்க.

  27. உண்மையைச் சொல்றவன்

    //நீங்கள் சொன்ன புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன். ஆனால், பொதுவான கருத்திற்கும் கம்யூனிஸ்ட் தொண்டருக்கும் உள்ள கருத்திற்கும் நீங்கள் தான் வித்யாசம் காண வேண்டும். அவ்வளவு வரலாற்று செய்தியுடன் சொல்லி இருக்கிற விக்கிபீடியா நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்க சற்று கடினமாகவே உள்ளது. இருப்பினும் நீங்க கூறிய நூல்களில் படிக்கிறேன்.//

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D

    விக்கிபிடியாவில் படிக்கவும் கபிலன்.

    //ஹிட்லரின் நாசி கட்சியும், சோவியத்தின் ஸ்டாலினும் சேர்ந்து போட்டுக் கொண்ட ஒப்பந்தம் தான் Non-Aggression pact அல்லது ஹிட்லர்-ஸ்டாலின் பேக்ட். இந்த ஒப்பந்தத்தை மீறி ஹிட்லர் சோவியத்தைப் படையெடுத்ததால்(ஆபரேஷன் பார்பரோசா) தான் இவ்விருவரும் எதிரிகளாக மாறினர் என வரலாறு சொல்கிறது.//

    கபிலனுக்கான பதில்:

    துரோகிகளை உருவாக்கிய புதிய புரட்டல்வாதம் உருவான அந்த நெருக்கடி மிகுந்த வரலாற்று காலகட்டம் குறித்து ஜார்ஜ் தாம்சனின் ‘மார்க்ஸ் முதல் மாவோ வரை’ புத்தகத்திலிருந்து:

    “சோவியத் அரசு வலுவடைய அடைய, ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள முரன்பாடுகளும் மேலும் கடுமையாகின. முதல் சோசலிச அரசுக்கு எதிரான தமது பகைமையில் அவை ஒன்றுபட்டன. அதன் வளர்ந்து வரும் வலிமையின் முன்னால் அவை பிளவுபட்டன. இப்பிளவு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளூம் வர்க்கத்துக்குள் பிரதிபலித்தது. பிரிட்டனில் சேம்பர்லினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட பெரும்பான்மையாக இருந்த பிரிவு சோவியத் யூனியனைத் தாக்குமாறு ஹிட்லரை ஊக்குவித்தது. ஹிட்லர் சோசலிசத்தை அழிப்பதுடன் இந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் பலவீனப்படுத்திக் கொள்வான் என்றும், அதனால் பிரிட்டன் ஐரோப்பாவின் மிகப்பலம் பொருந்திய அரசாக உருவாகும் என்றும் இப்பிரிவு நம்பிக்கை கொண்டிருந்தது.

    பிரிட்டனிடமும், பிரான்சிடமும் ஸ்டாலின் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். அது ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவாகியதும், அவர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.”
    (http://poar-parai.blogspot.com/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D)

    ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பு ஸ்டாலின் பிற நாடுகளிடம் ஒப்பந்தம் கோரினார். அது நிராகரிக்கப்பட்ட போது வேறு வழியின்றி போர்த் தயாரிப்பிற்கு ஒரு வருட கால அவகாசம் தேவைப்பட்ட நிலையில்தான் ஹிட்லரிடம் ஒப்பந்தம் இட்டுக் கொண்டார்.

    • அல்டிமேட் காமெடியன் இந்த “உண்மையை சொல்றவன்” தான்.. விக்கிபீடியா வில் இவர் குடுத்த இனைய தள பக்கத்தில் வெளி இணைப்புகள் பகுதியை பார்க்கவும்..

      https://vrinternationalists.wordpress.com/ தளத்தில் இருந்து சில பக்கங்கள் . அய்யோ அய்யோ ..

      பாத்து விழுந்து விழுந்து சிரிக்க தான் தோன்றியது எனக்கு ..

      விக்கிபீடியா தான் உலகம் என்று நம்பி இருக்கும் சிலரை இது போல் எமாதலாம் உண்மை சொல்றவரே.. ஆனா எங்ககிடயுமா !!

      உண்மைய சொல்லுங்க. அந்த விக்கிபீடியா பக்கத்தை உங்க கும்பல் தானே எழுதிச்சு?

  28. நல்ல விவாதம்,
    தொடருங்கள்…

  29. தோழர் நிழல் மற்றும் நான் வைத்த ஸ்டாலின் பற்றிய சாரமான அவதானிப்பை/ கேள்வியை ஒதுக்கி விட்டு, எங்களின் ‘பொதுவுடமை’ தத்துவதின் மீதான புரிதல் பற்றிய சந்தேகத்தை கிளப்புவதன் மூலம் விவாதத்தை வெற்றிகரமாக திசை திருப்பிய அனைவருக்கும் நன்றி. எனது முந்தைய மாற்றீடு
    ///அது என்ன செயல் தந்திர அடிப்படை?!! ஹிட்லர் ஒரு கொடுங்கோலன் என்பது பாவம் பச்சை புள்ள ஸ்டாலினுக்கு தெரியாதா? அதாவது நீ என்ன வேனா செய்து கொள் சோவியத்தை மட்டும் தொடதே. பச்சை சுயநலம். அப்புறம் என்ன சர்வதேசியவாதமும் கம்யூனிசமும். தன்னை தொடாமல் இருந்திருந்தால் இரண்டாம் உலக போரில் ஹிட்லர் செய்த எந்த கொடுமையையும் கேள்வியின்றி ஏற்றுகொண்டிருப்பார் சர்வதேச பாட்டளி வர்க்க பேராசான் ஸ்டாலின் என்பது மட்டுமே மறுக்க முடியாத உன்மை. நெருக்கடி! ஹும் கயவாளித்தனதுக்கு இப்படியும் பெயர் சூட்டலாம். மக்களின் தலைவனாக இருந்திருந்தால் 1989′ல் அவர் சிலைகள் தகர்க்கபட்ட போது மக்கள் அதற்க்கு எதிராக திரண்லெழுதிருப்பார்கள். அவர் மக்களின் எதிரி எனவே தான் அவர் சிலையை தகர்த்த போது கை தட்டி ஆரவரித்தார்கள், பட்டது அவர்கள் தானே எவனொ கனடா காரனும் சர்வதேசியவாதியும் அல்லவே.///
    அதற்க்கு மார்க்சிய மாணவன் ஒரு அஜலகுஜல’வான பதிலாய் என்னை புத்தகங்களை தேடி படிக்க சொண்னார்! இந்த விவாதம் வெகுவாய் திசை மாறி போயிருப்பினும் எதோ ஒரு நேர்மையான மார்கிசியனுக்கு இந்த கேள்வியை முன் வைக்கிறேன்.
    “நேரடியாக பதில் கூறுங்கள் சுற்றி வளைத்து பேச வேண்டாம்! 1939 அகஸ்டில் கையெழுத்து இட்டு விட்டு, 1939 செப்டம்பரில் இருந்து 1941 வரை ஸ்டாலின், ஹிட்லரின் அராஜகமான அய்ரோப்பியா மீதான இரானுவ படைஎடுப்பை ஏன் கேள்வி ஏதும் இன்றி ஏற்றுகொண்டார்? மனித குலம் கொத்து கொத்தாக கொன்றொழிக்கபட்டு கொண்டிருந்த போது எஙகே ஒளிந்து கொன்டிருந்தார் சர்வதேச பாட்டாளி வர்க்க தோழர் ஸ்டாலின்? செத்து கொண்டிருந்தவர்கள் மனிதர்கள் இல்லையா? பாட்டளிகள் இல்லையா? அல்லது சோவியத் பிரஜைகள் இல்லையா? எதனால் மொளனம் காத்தார் அந்த கோழை.
    காந்தியும் காங்கிரசும் ஒழியனும் என மேடைதோறும் அறைகூவல் விடுத்து கொண்டிருந்த பெரியாரை போல் (ஓரு ஒப்பீட்டுகாக மட்டும் சொல்கிறேன் இதை வைத்து ஒரு விவாதத்தை கிளப்பி விட வேண்டாம்!), கம்யூனிஸ்ட்டும் கம்யூனிஸமும் ஒழியனும் / ஒழிக்கனும் என அறைகூவல் விடுத்து கொண்டு அதை செயலிலும் செய்து கொன்டிருந்த ஹிட்லர் உடன் உடன்படிக்கை என்பது வடிக்கட்டிய அயோக்கியத்தனம். ஸ்டாலின் செய்தா இந்த தவறுக்கு எத்தனை மனிதர்கள்(கம்யூனிஸ்ட்டுகள் உட்பட) பலியிடப்ப்ட்டார்கள் தெரியுமா?
    பின்னாட்க்களில் ஒன்றியம் (சோவியத்து) ஒரு சமூக ஏகாதிபத்தியமாய் திரிந்து போனதர்க்கு முழு காரணமும் ஸ்டாலின் தான். இயந்திரமயமாக்கல், இரானுவமயமாக்கல் என மக்களிடம் இருந்து அரசை பிரித்தெடுத்து அந்த தவற்றை துவக்கி வைத்தவர் அவர். ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட், மார்க்ஸ் > லெனின் > மாவோ என்று தான் தன் பாதையை வகுத்து கொள்ள வேண்டுமே தவிர, மனித குல விரோதி ஸ்டாலினை முன் வைத்து அல்ல.”
    ஸ்டாலின் காலத்திய சோவியத்து அரசுக்கும் மக்களுக்குமான உறவு அந்நியமானது ஏன் எனும் கேள்விகளுடன் நமது பரிசீலனைகள் தொடர்ந்தால் மட்டுமே சோஷலிஸ கட்டுமாணத்தின் பிரச்சனைகள் புரிபட துவங்கும். ஸ்டாலினை பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றை பிரதிநிதியாய் அல்லது ஹீரோவாய் பார்க்காமல் குறைகளும் உள்ள ஒரு கம்யூனிஸ்ட் என பார்க்கும் பொழுது தான் மக்களின் அதிகாரம், அரசுக்கு கைமாறிய அவலம் புரியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு, ஏகாதிபத்திய அரசுகளின் சாயலில் கட்டியமைக்கபட்ட வரலாறு துலங்கும்.

    மாற்று கருத்து கொண்டவர்களையும் மாற்று இயக்கதாரையும் அழித்தொழிக்கும் புலிகளின் செயல் அராஜகம் என்றால் (அராஜகம் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை) கம்யூனிஸ்ட்டுகளின் செயல்களை எப்படி நியாய படுத்துவது? நியாமாய் ஒரு கம்யூனிஸ்ட் அப்படி மாற்று கருத்து உள்ளவர்களை தனது நேர்மைத்திறனால் வென்றெடுக்க வேண்டுமே தவிர இப்படி அழித்தொழித்து அல்ல என்பதை ஒப்பு கொள்வோமாயின், ஸ்டாலின் கம்யூனிச பாதையில் ஒரு இடர் என்பதை ஒப்பு கொள்வோம்.

    சோஷலிஸ கட்டுமாணத்தை (கட்டுமாணத்தை மட்டுமே) அவர் வெற்றிகரமாய் நிறுவியதை வைத்து அவரை புகழ்வதை தவிர்த்து அதன் அடித்தளங்கள் செம்மையில்லாமல் போனதை (பில்டிங் ஸ்டார்ங் பேஸ்மன்ட் வீக்) கண்டு கொள்ள விழைகிறேன். மேலும் அதை கட்டியமைக்க அவர் கையாண்ட முறைகளும் அழமான பரிசிலனைக்கு உரியன. இந்த வரலாற்றை சரியாக அவதானிக்கவில்லை என்றால் நாம் மீன்டும் மீன்டும் அதே தவற்றை செய்து கொண்டிருப்போம். ஒப்பீட்டளவில் மாவோவின் பங்களிப்பான சீணாவின் சோஷலிச கட்டுமாணம் கொஞ்சம் அதிக பலம் வாய்ந்து இருப்பதால்த்தான், ஏகாதிபத்திய அரசுகள் சோவியத்தை ஒரே நாளில் தகர்த்து எறிந்தது போல் (ஹும்… நீண்ட கால முயற்ச்சிக்கு பின் என்றாலும்) சீணாவை தகர்க்க முடியாமல் பின் வாசல் வழியே நுழைந்து முயற்ச்சித்து கொண்டிருக்கிறது.(விவாதத்துக்கு உரியது நான் மேலும் புரிந்து கொள்ள முயல்கிறேன்) இங்கு சிலர் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் போல் வந்து ஸ்டாலின் புகழ் பாடுவதை பார்க்கும் போது…ஷப்பா இப்பவே கண்ணை கட்டுதே…

  30. உண்மையைச் சொல்றவன்

    //துரோகிகளை உருவாக்கிய புதிய புரட்டல்வாதம் உருவான அந்த நெருக்கடி மிகுந்த வரலாற்று காலகட்டம் குறித்து ஜார்ஜ் தாம்சனின் ‘மார்க்ஸ் முதல் மாவோ வரை’ புத்தகத்திலிருந்து:

    “சோவியத் அரசு வலுவடைய அடைய, ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள முரன்பாடுகளும் மேலும் கடுமையாகின. முதல் சோசலிச அரசுக்கு எதிரான தமது பகைமையில் அவை ஒன்றுபட்டன. அதன் வளர்ந்து வரும் வலிமையின் முன்னால் அவை பிளவுபட்டன. இப்பிளவு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளூம் வர்க்கத்துக்குள் பிரதிபலித்தது. பிரிட்டனில் சேம்பர்லினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட பெரும்பான்மையாக இருந்த பிரிவு சோவியத் யூனியனைத் தாக்குமாறு ஹிட்லரை ஊக்குவித்தது. ஹிட்லர் சோசலிசத்தை அழிப்பதுடன் இந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் பலவீனப்படுத்திக் கொள்வான் என்றும், அதனால் பிரிட்டன் ஐரோப்பாவின் மிகப்பலம் பொருந்திய அரசாக உருவாகும் என்றும் இப்பிரிவு நம்பிக்கை கொண்டிருந்தது.

    பிரிட்டனிடமும், பிரான்சிடமும் ஸ்டாலின் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். அது ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவாகியதும், அவர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.”
    (http://poar-parai.blogspot.com/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D)

    ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பு ஸ்டாலின் பிற நாடுகளிடம் ஒப்பந்தம் கோரினார். அது நிராகரிக்கப்பட்ட போது வேறு வழியின்றி போர்த் தயாரிப்பிற்கு ஒரு வருட கால அவகாசம் தேவைப்பட்ட நிலையில்தான் ஹிட்லரிடம் ஒப்பந்தம் இட்டுக் கொண்டார்.//

    இது உலக உண்மை.

    நிழல்களை தொடருபவர்களுக்கு புரியாது

  31. ///தமிழ் பதிவுலகிலும் சில மனநிலை பாதிக்கப்பட்ட பரிதாப்பத்திற்குறிய பிறவிகள் ஸ்டாலின்-சர்வாதிகாரம்- சோவியத்- கமிசார்கள் என்று பினாத்திக்கொண்டு இணைய வெளிகளில் அலைந்து திரிகின்றன. இவ்வாறு அவதூறு செய்கிறவர்களில் இரண்டு வகை உண்டு ஒன்று அ.மார்க்ஸ்,எஸ்.வி. ராஜதுரை அறிவாளி வகையறா, இரண்டாவது ஜெயமோகன், K.Rஅதியமான்,அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவ கோமாளிகளின் கூட்டம்.இந்த‌ இரண்டு தரப்புக்கும் இடையே பல கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இரண்டும் ஒன்றுபடும் ஒரு புள்ளி இருக்கிறது, அது தான் கம்யூனிச எதிர்ப்பு. பித்தம் தலைக்கு ஏறிப்போய் கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளை மட்டுமே எழுதும் ///

    ///தமிழ் பதிவுலகிலும் சில மனநிலை பாதிக்கப்பட்ட பரிதாப்பத்திற்குறிய பிறவிகள் ஸ்டாலின்-சர்வாதிகாரம்- சோவியத்- கமிசார்கள் என்று பினாத்திக்கொண்டு இணைய வெளிகளில் அலைந்து திரிகின்றன. இவ்வாறு அவதூறு செய்கிறவர்களில் இரண்டு வகை உண்டு ஒன்று அ.மார்க்ஸ்,எஸ்.வி. ராஜதுரை அறிவாளி வகையறா, இரண்டாவது ஜெயமோகன், K.Rஅதியமான்,அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவ கோமாளிகளின் கூட்டம்.இந்த‌ இரண்டு தரப்புக்கும் இடையே பல கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இரண்டும் ஒன்றுபடும் ஒரு புள்ளி இருக்கிறது, அது தான் கம்யூனிச எதிர்ப்பு. பித்தம் தலைக்கு ஏறிப்போய் கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளை மட்டுமே எழுதும்//

    இல்லை. யாருக்கு மனநிலை பாதிப்பு என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ! )

    ஆதாரமில்லாமல் பேசுவதுதான் அவதூறு. ஸ்டாலினால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பற்றிதான் சர்ச்சை. மிகைபடுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் மிக பெரும் கொலைகாரர் என்பதில் மிகை இல்லை. வரலாறு பொய்களால் உருவாக்க முடியாது. பழைய சேவியத் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய
    மக்களிடம் சென்று பேசிப் பாருங்க.

    ///கம்யூனிச எதிரிகளோ ஸ்டாலின் என்கிற பெயரை கேட்டால் அச்சமும் பீதியும் கொண்டு அலறுகிறார்கள்.////

    ////எங்கே மீண்டும் ஸ்டாலினுடைய ஆவி எழுந்து வந்துவிடுமோ என்று அஞ்சி இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆன‌ பிறகும் அவரைப்பற்றிய அவதூறுகளை முதலாளித்துவ தொடை நடுங்கிகள் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்கள்./////

    You are crazy yaar. Actually no one cares to remember Stalin anywhere. No need for anti-communists
    to expose Stalin’s deeds, etc. This kind of ranting shows who is demented and crazy !!

    எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் : இவர்கள் இருவரும் மார்க்ஸியவாதிகள் தாம்.
    ஸ்டாலின் காலத்து வரலாற்றை அறிந்து எழுதுவதாலேயே, அவர்களை கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என்று நீங்க கருதுவது உமது அறியாமையையும், மேலோட்டமான அறிவையும் வெளிப்படுத்துகின்றன.

    இறுதியாக யான் ஒரு இந்துதுவவாதி அல்ல. சாதி, மத, இன, மொழி பேதங்களை
    வெறுப்பவன். ஓ.கே.

    And JeMo and A.Neelakanttan are not the usual RSS type hinduthvaaists. That is my perception.

    • ///யாருக்கு மனநிலை பாதிப்பு என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!/////
      ///ஆதாரமில்லாமல் பேசுவதுதான் அவதூறு. ஸ்டாலினால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பற்றிதான் சர்ச்சை. மிகைபடுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் மிக பெரும் கொலைகாரர் என்பதில் மிகை இல்லை. வரலாறு பொய்களால் உருவாக்க முடியாது. பழைய சேவியத் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய மக்களிடம் சென்று பேசிப் பாருங்க.////

      இதோ இது போல ஆதாரமின்றி கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்வதும், ஆதாரம் கேட்டால் விக்கிபீடியாவையும், அவதூறு லின்க்குகளை தருவது யாரென்றும், வாசகர்களுக்கும் தெரியும் தானே அதியமான்? இங்கும் லின்க் கொடுக்க ஆரம்பித்துவிடாதீர்கள்!!!

      நீங்கள் ஏதோ சேவியத் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய மக்களிடம் (உழைக்கும் மக்களிடம்) போய் பேசி பழகி வந்ததை போல சொல்கிறீர்களே?

      அன்னா லூயி ஸ்ட்ராங்கின் “ஸ்டாலின் சகாப்தம்” புத்தகம் பற்றியும், மைக்கேல் சேயர்ஸ் மற்றும் ஆல்பர்ட் இ.கான்னின் “மாபெரும் சதி” புத்தகம் பற்றியும் எங்குமே வாய் திறக்க மறுக்கிறீர்களே ஏன் அதியமான்?

      ///You are crazy yaar. Actually no one cares to remember Stalin anywhere. No need for anti-communists to expose Stalin’s deeds, etc. This kind of ranting shows who is demented and crazy !!/////

      நாங்கள் தோழர் ஸ்டாலினை மறக்கவுமில்லை அதை மறுக்கவும் இல்லை. பாட்டாளி வர்க்க படையின் சிறந்த தளபதியான அவரை மறக்கவும் மாட்டோம்!

      நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்பதே உண்மை! அதை விடுத்து எங்குமே அவரை பற்றி பேசாதது போலலல்லவா ‘no one cares to remember Stalin’ என்கிறீர்கள்!

      தோழர் ஸ்டாலினை பற்றி போகுமிடமெல்லாம் அவதூறு செய்ததுமில்லாமல், பல இடங்களில் (தளங்களில்) “அதியமானுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஸ்டாலின், மாவோ, சர்வாதிகாரம், படுகொலை என்ற பிற கம்யூனிச அவதூறுகளை சொல்லவில்லையென்றால் தூக்கமேவராது” என்று பெயரெடுத்திருப்பதை நாமும் அறிவோம், வாசகர்களும் அறிவார்கள். (அப்படி அவதூறு பரப்பாத இரவுகளில் துக்கத்தில் – கனவில் – புலம்புகிறீர்களோ என்னவோ? யார் கண்டது?)

      ///எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் : இவர்கள் இருவரும் மார்க்ஸியவாதிகள் தாம்./////

      காமெடி பண்ணாதீர்கள் அதியமான். இதை அவர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

      ///இறுதியாக யான் ஒரு இந்துதுவவாதி அல்ல. சாதி, மத, இன, மொழி பேதங்களை
      வெறுப்பவன். ஓ.கே./////

      இந்துதுவவாதியாக இருக்க டவுசர் போட்ட ஆர்.எஸ்.எஸ் காரராக தான் இருக்கவேண்டும் என இல்லை.

      ///And JeMo and A.Neelakanttan are not the usual RSS type hinduthvaaists. That is my perception./////

      ஜெயமோகன் ஒரு முன்னால் ஆர்.எஸ்.எஸ் காரர், இன்று இந்துதுவத்திற்க்கு சிந்த்தாந்த விளக்கம் கொடுக்க முற்படுகிறார்.

      அரவிந்தன் நீலகண்டன் இன்றளவும் டவுசர் போட்டு சாகாவுக்கு செல்லும் ஆர்.எஸ்.எஸ் காரர்.

      கொலைகாரர்கள், அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என உங்களால் மட்டுமே பிரித்து பார்க்கமுடியும். அதனால், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இங்கு தோழர்கள் எழுதியது சரியேென்பது என் கருத்து!

      புரியவில்லையா? மேலிருந்து திரும்ப படிக்கவும்!

    • அவ்வை பாட்டி

      பேராண்டிகளா,

      நெல்லிக்கனி, அதியமான்னெல்லாம் பேர் வச்சிருக்கும் இந்த அதியமான் தம்பி எனக்கு உண்மையிலேயே நெல்லிக்கணி கொடுக்கவே இல்லப்பா, இதை உங்க எல்லாருக்கும் சொல்லனும்ன்னு தாம்பா வந்தேன். நானே ரொம்ப கஸ்டப்பட்டு தாம்பா இந்த பின்னூட்டத்தயே போடுறன். யாராவது அந்த தம்பிய பார்த்தீங்கன்னா ‘நெல்லிக்கனிய’ மட்டும் புடுங்கி எங்கையில குடுத்துருங்கப்பா ரொம்ப புண்ணியமா போவும். அத வெச்சுகிட்டு இந்த தம்பி பண்றத தாங்க முடியல..

  32. உண்மையைச் சொல்றவன்

    //A.Neelakanttan are not the usual RSS type hinduthvaaists//

    அட ராசா… அரவிந்தன் நீலகண்டன் ஆர் எஸ் எஸ் ஆள். பொருத்துமா சொல்லு தம்பி…

  33. புளிப்பு நெல்லிக்காய்

    அதியமான் ஒரு சைவமான் என்பதை இந்த உலகிற்கு நான் அறிவிக்கிறேன்.

  34. அதியமான் கரூரைச் சேர்ந்தவர். அவர் பார்ப்பு அல்ல. கவுண்டர் அல்லது நாயக்கர் என்று நினைக்கிறேன்.

  35. i think people over here are severely misinformed about Stalin.ask the russians,stalin has forced his people into labor camps and caused death of lakhs of them.people still remember this as the biggest tragedy in russian history.Recently the russian premier Dmitry Medvedev delivered a speech on the occasion of remembering the stalin era victims(that day seems to be a holiday there!)
    You guys were asking for proof,here it is,direct from the Kremlin’s head:
    http://rt.com/Politics/2009-10-30/medvedev-victims-political-repression.html

  36. Pingback: ”எனிமி அட் தி கேட்ஸ்” -பாசிசத்தை வீழ்த்திய ஸ்டாலின்கிராடு « அதிகாலையின் அமைதியில்

  37. இளமாறன்

    தோழர் ஸ்டாலினை தவறாக சித்தரிக்கும் கலைஞர் டிவியை புறக்கணிப்போம்!

    http://athikalai.wordpress.com/2011/03/31/kalaiger-tv/

  38. Pingback: வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்! « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

  39. Pingback: சோசலிச சமூகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறை ஏன்? – தோழர் ஸ்டாலின் பதில்! « புரட்சிகர மாணவர்-இளைஞர் ம

  40. Pingback: லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்! « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

  41. Pingback: நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

  42. Pingback: பாசிசத்திலிருந்து உலகை காப்பாற்றிய சோவியத்தின் வீரர்கள்! « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

  43. Pingback: நவம்பர் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ம.க.இ.க. – பு.மா.இ.மு.-பு.ஜ.தொ.மு.-பெ.வி.மு ஆகிய அமைப்புக

  44. Pingback: நான் உலகம், தொழிலாளி நானே உலகம்! நவம்பர் புரட்சி நாள் விழா வீடியோ! « புரட்சிகர மாணவர்-இளைஞர் மு

  45. Pingback: கீரோவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது! « புரட்சி

Leave a comment