உண்மை, ஊடகம், ஜனநாயகம் !

இந்த நாட்டிலுள்ள பல லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள அரிய கணிம வளங்களை எல்லாம் வெளி நாட்டுக் கம்பெனிகள் எந்த தடையுமின்றி கொள்ளையடித்துச் செல்வத‌ற்கு ஏற்ப‌ இந்திய அரசே சல்வாஜூடும் என்கிற கொலைகார‌ கூலிப்படையை உருவாக்கி வளர்த்து வருகிறது. அந்த கூலிப்படை பழங்குடி மக்களை கொலை செய்கிற‌து,அவர்களுடைய கிராமங்களை வேட்டையாடுகிறது. இந்த கூலி கும்பலுக்கு துணை நிற்கும் மாநில‌ அரசும், போலீசும் இன்னொரு கூலிக் கும்பலைப் போல தனது மக்களையே கற்பழிப்பதையும், கொலை செய்வதையும், முதியவர்கள் என்று கூட பாராமல் துப்பாக்கிகளால் சுடப்படுவதையும், இரண்டு வயது குழந்தையான மகேக்ஷ் முக்த்வியின் விரல்கள் வெட்டப்பட்டதையும் இதற்கெல்லாம் பா.சிதம்பரமும், மன்மோகன் சிங்கும், போலீசும், கூறுகின்ற காரணங்கள் அவர்கள் அனைவரும் நக்சலைட்டுகள் மாவோயிஸ்டுகள் எனவே தான் இந்த நடவடிக்கை என்கிற பொய்யையும் கேரளாவைச் சேர்ந்த கோபால் மேனன் என்கிற குறும்பட இயக்குனர் எளிமையாக‌ அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியா எப்பேர்பட்ட‌ ஜனநாயக நாடு என்பதை இந்த‌ கிரீன் ஹன்ட் நடவடிக்கை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியுள்ளது. அரசு மட்டுமல்ல, தெகல்கா போன்ற சில‌ விதிவிலக்கான‌ பத்திரிகைகளை தவிர, அருந்ததிராய் போன்ற சில விதிவிலக்கான அறிவுஜீவிகளைத் தவிர‌‌ இந்தியாவிலுள்ள அனைத்து ‘ஜனநாயக’ ஊடகங்களும் சல்வாஜூடுமின் செய்திப் பிரிவாகத் தான் செயல்படுகின்றன. டைம்ஸ் நவ் செய்திகளை பார்க்கக்கூடிய யாரும் உண்மைகளை அறிந்து கொள்ளவே முடியாது. மாவோயிஸ்ட் தோழர்கள் நாலு மக்கள் விரோதிகளை கொன்றதற்கே டிவியில் உட்கார்ந்து கொண்டு குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டு கண்ணீர் வடிக்கும் இந்த ஜனநாயகவாதிகளுக்கு உண்மை நிலை என்ன என்று அறிவிக்க நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக‌ ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தோம். தமிழ‌கத்தின் அனைத்து பத்திரிகைகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் வந்ததோ நாலு பேர் தான். பிரஸ் மீட்டுக்கு வராத இந்தியாவின் தேசிய நாளிதழ்கள், தொலைக் காட்சிகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை அழைத்து ஏன் வரவில்லை என்று கேட்டால், எங்களுக்கு எந்த இன்க்ஷ்ட்ரக்க்ஷனும் இல்லையே என்கிறார்கள். வந்த பத்திரிகையாளர்களின் பத்திரிகைகளிலும் பிட்டு செய்தி் கூட‌ வரவில்லை. அதன் பிறகு மாலை கிரீன் ஹண்டுக்கு எதிராக கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட இருட்டடிப்பு செய்ய முடியும் என்பதை அடுத்த நாள் தான் அறிந்தோம். உண்மையில் இது மாபெரும் ஜனநாயக நாடு தான். இவர்கள் அனைவரும் உண்மையான‌ ‘ஜனநாயக‌ செய்தி ஊடகங்கள்’ தான். உண்மைகளை இது போன்ற‌ ஊடகங்களில் தேடி திருப்தி கொள்ளும் தேசபக்தியும், ஜனநாயக பித்தும் கொண்டவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள், கண்களை திறந்து கொண்டு பாருங்கள். உங்களை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கும், பா.சிதம்பரமும் அப்பட்டமான அமெரிக்க தாசர்களாகி நிற்கும் அழகை ந‌ன்றாக பாருங்கள். வெளி நாட்டு ஏகபோக‌ முதலாளிகளுக்காக நமது சகோதரர்களான சொந்த‌ நாட்டு மக்களையே கொல்லும் இந்த கைக்கூலிகளை அருந்ததிராயின் வார்த்தைகளிலும், ஹிமான்க்ஷ் குமாரின் கோபத்திலும், தெகல்காவின் புலனாய்விலும், கோபால் மேனனின் காட்சிகளின் ஊடாகவும் பாருங்கள். உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய இடுகைகள் :

இது தான் ப.சிதம்பரத்தாலும் மன்மோகன்சிங்காலும் விற்பனை செய்யப்பட்ட நியமகிரி மலை !!

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !!

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.

போரை நிறுத்து !!

காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ?

இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!

ஈழத்தை அழித்த‌ இந்திய ஜனநாயகம் இந்திய மக்களையும் அழிக்கிறது !அரச பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக‌ தமிழகம் தழுவிய மாபெரும் பிரச்சார இயக்கம் துவக்கம்.

மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!

Breaking News! Youngest Maoist Nabbed!

OPERATION GREEN HUNT !!

Campaign Against Operation Green Hunt!

இன்றைய சூழலில் உங்களால் நடுநிலை வகிக்க முடியுமா ? அருந்ததிராய் எழுப்பும் கேள்வி!


2 responses to “உண்மை, ஊடகம், ஜனநாயகம் !

  1. சமூக சிந்தனை

    வாழ்க வல்லரசு நாட்டின் ஜனநாயகம்!!

  2. தியாகு

    தோழர் கருப்பு பேக்ரவுண்டை மாற்றி வேற கண்களை உறுத்தாத பேக்கிரண்டு வைக்க முடியுமா

Leave a comment